Monday, October 17, 2016

'தனியொருவனுக்கு உணவில்லை எனில்...' #WorldFoodDay

‘‘உன்னிடம் பணம் இல்லாவிட்டால் உணவே பிரச்னை. பணம் இருந்தால் காதலே சுகம். ஆனால், இரண்டும் இருந்தால் அதுவே சுகவாழ்வு’’ என்றார் அமெரிக்க நாவலாசிரியர் ஜெ.பி.டொன்லெவி. 
உணவு, உடை, உறைவிடம் மூன்றும் மனிதனின் அத்தியாவசியத் தேவைகள். இதில் முதன்மையானது உணவு! மனிதனுக்கு மட்டுமல்ல... உயிரினங்கள் அனைத்துக்கும் உணவே பிரதானத் தேவை. உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவுத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உணவுத் தினத்தின் நோக்கம்!
கடந்த 1979-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்தத் தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளில் ஆண்டுதோறும் 150-க்கும் மேற்பட்ட நாடுகள் உலக உணவுத் தினத்தைச் சிறப்பிக்கின்றன. ‘அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கத்தில் உலக உணவுத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உணவு தொடர்பான பிரச்னையில் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதுவும் இதன் முக்கிய நோக்கம். உணவுப் பஞ்சமும், விலைவாசி ஏற்றமும் பல நாடுகளில் ஆட்சிக் கட்டிலையே அடியோடு சாய்த்திருக்கின்றன. அதனால்தான் பாரதி, ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69690-world-food-day-special-article.art

நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment