Monday, October 10, 2016

விமானப் படையில் புதிய ரக போர் விமானம்!

ம் நாட்டுப் பாதுகாப்புப் படைகளின் ஓர் அங்கமாக விளங்குவது இந்திய விமானப்படை. இது, போரின்போது எதிரி நாடுகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து நம் நாட்டைப் பாதுகாப்பதோடு, அதுபோன்ற தாக்குதலையும் நடத்தக்கூடியது. இது, 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப் படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 84-வது விமானப் படை தினம் கொண்டாடப்படுகிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நம் நாட்டுப் பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவாக இந்திய விமானப் படை மாறியது.

இதில், சுமார் 1,130 போர் விமானங்களும், 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் உள்ளன. சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் இந்தப் படையில் உள்ளனர். உலகின் நான்காவது பெரிய விமானப் படையாக நம் இந்திய விமானப் படை திகழ்கிறது. இதற்கு ஜனாதிபதியே முதல் பெரும்படைத் தலைவராக உள்ளார்.


மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69282-new-fighter-jetplanes-in-indian-airforce.art

நன்றி: விக்டன் இணையதளம்

No comments:

Post a Comment