Tuesday, September 5, 2017

''என்னிடம் எளிமையான கேள்வி ஒன்று இருக்கிறது!” - இறந்த அனிதாவும்... விடை கிடைக்காத அவளது கேள்வியும்

''என்னிடம் எளிமையான கேள்வி இருக்கிறது. இங்கு எல்லோருக்கும் எல்லாமும் சரி சமமாகக் கிடைக்கிறதா... எல்லோருக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்கிறதா... எல்லோருடைய பொருளாதார நிலையும் ஒன்றுபோல இருக்கிறதா... இங்கு ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லையா...? எனக்குப் பெரிதாக அரசியல் புரிதல்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லா அரசியலும் எங்களுக்கும் தெரியும் என்பவர்கள், எனது இந்த எளிமையான கேள்விக்கு பதில் சொல்லட்டும். இங்கு யாருக்கும் எதுவும் சரிசமமாகக் கிடைக்காதபோது அனைவருக்கும் ஒற்றைத் தேர்வு என்பது யாரை ஏமாற்றும் வேலை..?  நான் கேட்கும் கேள்விகள் அனைத்தும், ஒரு தனிமனிதியின் கேள்விகள் இல்லை. கல்வியை இறுகப்பற்றி மேலே எழுந்துவிடலாம் என்ற பெரும் கனவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மாணவர்களின் கேள்விகள். இது சங்கடம் தரும் கேள்விகள்தான். ஆனால், நியாயம் கிடைக்கும்வரை இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புவேன்... எழுப்புவோம்” என்று கடந்த பத்து நாள்களுக்கு முன் சபதமிட்ட ஒரு பெண்தான், இன்று மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/101058-i-have-a-question-for-you---last-minutes-of-anitha.html

நன்றி: விகடன் இணையதளம்

அரியலூரின் மகளே... அவசரப்பட்டு விட்டாயே!

''அரியலூரின் மகளே... அவசரப்பட்டு விட்டாயே! 'ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல... உன்னைப்போலச் சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே' என்று சொன்ன, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான், ‘உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்குக் கூட எதிர்காலம் உண்டு' என்று சொன்னார். ஆனால் நீயோ, அந்த வரிகளை நினைக்காமல்... அவர் சொன்ன இன்னொரு பொன்மொழியான, 'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்பதை நினைவில் வைத்து உன் முடிவைத் தேடியிருக்கிறாயே? அவசரத்தில் நீ தேடிக்கொண்ட முடிவால், அரசாங்கத்தில் மாற்றமா நிகழ்ந்துவிடப் போகிறது? ஒருபோதும் நடக்காது. ஆனால், நீ எடுத்த இந்தத் தற்கொலை முடிவைக் கொஞ்சம் மாற்றி வேறு பாதையில் பயணித்திருந்தால், இன்னொரு சரித்திரத்தையும் நீ உருவாக்கியிருக்க முடியுமே... அதை ஏன்  நீ உணராமல் போனாய்? 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/coverstory/101152-you-made-a-hard-decision-anitha.html

நன்றி: விகடன் இணையதளம்