Sunday, October 30, 2016

‘அரசியலை நான் தொழிலாகப் பார்ப்பதில்லை!’ - இந்திரா காந்தி நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

‘‘னக்கு நல்லது செய்தவர்களைவிட, தீங்கு செய்தவர்கள்தான் அதிகம். ஆனால், என்னிடம் அவர்கள் திரும்ப வரும்போது யாரிடமும் எதுவும் சொல்லிக்காட்டாமல் அவர்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அவர்கள் மேல் கசப்புணர்வு தோன்றாமல் இருப்பதும்’’ என்றவர் அன்னை இந்திரா காந்தி. அவருடைய நினைவு தினம் இன்று.
இந்திராவின் சிறுவயது நாட்கள்!
கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் அலகாபாத் நகரம்; அங்கு, ‘ஆனந்த பவனம்’ என்னும் அழகு மாளிகை. அரண்மனைக்கு ஒப்பான அந்த மாளிகையில் ஒரு இளவரசரை விடவும் மேன்மையாக வளர்க்கப்பட்டவர் ஜவஹர்லால் நேரு. இவருக்கும் காஷ்மீர் ரோஜாவுக்கு ஒப்பான கமலாவுக்கும் மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்ஷினி.
தங்கத் தொட்டில்; வெள்ளித் தட்டு; அலங்கார நடைவண்டி; 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்... இவையனைத்தும் அரண்மனை போன்ற அந்த மாளிகையில் நிரம்பி இருந்தன. இருந்தும் என்ன பயன்? சிறுமி இந்திராவின் உறவுகள் எல்லாம் சிறைச்சாலைகளிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் அல்லவா குழுமியிருந்தன. சிறைவாசம் முடிந்து வரும் தாத்தா மோதிலால் நேருவின் மடியில் சில காலம் விளையாடுவார் சிறுமி இந்திரா. பிறகு, மீண்டும் கைதாகிச் சிறைக்குச் சென்றுவிடுவார் தாத்தா. அப்பா ஒரு சிறையில்; அன்னையும், பாட்டியும் அந்நிய நாட்டுத் துணிகளைச் சேகரித்துத் தீயிட்டுக் கொளுத்தும் கண்டன ஊர்வலத்தில். இப்படித்தான் நகர்ந்தன சிறுமி இந்திராவின் சிறுவயது நாட்கள்.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/70921-indira-gandhi-memorial-day-special-article.art
நன்றி: விகடன் இணையதளம்

‘பயிருக்கு மழையாய் வந்த மகள்..!’ - நிவேதிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு...!

‘‘எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற உன்னால் உதவ முடியும் என நம்புகிறேன்’’ என்று சொன்ன சுவாமி விவேகானந்தரின் வரிகளுக்கு மதிப்புக் கொடுத்து, உடனே இந்தியா வந்தவர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இவர் வேறு யாரும் அல்ல... சுவாமி விவேகானந்தரின் முதன்மைச் சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா தான். அவருடைய பிறந்த தினம் இன்று.
மேற்கத்திய நாட்டிலிருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்... நம்முடைய பண்பாட்டின் மீதும் நம் மக்களின் முன்னேற்றத்தின் மீதும் முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்ந்து மறைந்த மார்கரெட் எலிசபெத் நோபிள், அயர்லாந்து நாட்டில் வசித்த மதபோதகரான சாமுவேல் நோபிள் - மேரி ஹாமில்டன் தம்பதியருக்கு 1867-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் நாள் மகளாகப் பிறந்தார். தந்தை உடல்நிலை காரணமாக, சிறுவயதிலேயே இறந்ததால் தன் தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்தார். இசையிலும் நுண்கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்த மார்கரெட், கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட ஹாலிபாக்ஸ் கல்லூரியில் பயின்றார். கல்லூரிப் படிப்பை முடித்த மார்கரெட், இங்கிலாந்தில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். ஏழைகளுக்குச் சேவை செய்வதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். பின்னர், 1892-ல் சொந்தமாகப் பள்ளி ஒன்றை நிறுவி அதனை மென்மேலும் முன்னேற்றினார்.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/india/70773-sister-niveditas-birthday-special-article.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: விகடன் இணையதளம்

Tuesday, October 25, 2016

'காவல் துறை உங்கள் நண்பன்' என்பது சரியா?

அது ஒரு மழைக்காலம். ஆனாலும் சென்னை மக்கள், அதைப் பொருட்படுத்தாது தத்தமது பணிகளுக்காகப் பறந்துகொண்டிருந்தனர். சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் வாகனங்கள் தவழ்ந்து சென்றன. அதில்தான் அதிக கட்டணம் வசூலிக்கும் அரசுப் பேருந்து ஒன்றும் நீந்திவந்தது. சென்னை அயன்புரம் இ.எஸ்.ஐ பஸ் நிறுத்தத்தில் நின்ற அந்தப் பேருந்தில், ஜன்னலோர இருக்கைகள் நனைந்து இருந்தன. அதில், அவசர அவசரமாக ஏறினார் காவல் துறை அதிகாரி ஒருவர். ஏறியவர், நனையாத சீட்டில் அமர்ந்திருந்தவரிடம், ‘‘நீங்கள் ஜன்னலோர சீட்டில் உட்காருங்கள். நான் இதில் உட்கார்ந்துகொள்கிறேன்’’ என்றார். உட்கார்ந்திருந்தவருக்குக் கோபம் வந்தாலும்... அதைக் காட்டிக்கொள்ளாது, ‘‘நீங்கள் போய் அந்த சீட்டில் உட்காருங்கள். நான் உட்கார முடியாது’’ என்றார். ‘‘நான் டூட்டிக்குப் போகிறேன். என் சீருடை அழுக்காகிவிடும்’’ என்றார் போலீஸ் அதிகாரி. ‘‘அப்போ, நாங்க மட்டும் என்னா பீச்சுக்குக் காத்துவாங்கவா போறோம்... எங்க டிரஸ் அழுக்காகாதா?’’ என்றார் அந்தப் பெரியவர் சற்றே கோபத்துடன். உடனே போலீஸ் அதிகாரி, ‘‘நான் போலீஸ்’’ என்றார். அதற்குப் பெரியவர், ‘‘நீங்க போலீஸ்னா... நீங்க சொல்றபடி நடக்கணுமா? போலீஸ்னா, பொதுமக்களுக்குத்தான் சேவை செய்யணும்ங்கிறத முதல்ல தெரிஞ்சுக்கங்க’’ என்றார் அதே கோபத்துடன். அதற்குமேல் அந்த போலீஸ் அதிகாரியால் எதுவும் பேச முடியவில்லை. எல்லோரும் அவரையே பார்த்தனர். ஆகையால், அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நடையைக் கட்டிவிட்டார்.  

‘‘ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்கும் இவர்கள் படிக்கட்டிலேயே வழியை மறித்துக்கொண்டு நிற்கிறார்கள். இவர்களும் உள்ளே செல்லாமல், மற்றவர்களையும் உள்ளேவிடாமல் தடுப்பணைபோல் நின்றுகொள்கிறார்கள். அதிலும் பெண் போலீஸார், அறவே உள்ளே தள்ளிச்செல்வது இல்லை. சீருடையில் இருப்பதால் பயணிகளும் அவர்களிடம் பேசப் பயப்படுகின்றனர். ஆனால், கூட்டநெரிசலின்போது படியில்தொங்கும் இளைஞர்களை மட்டும் பிரம்பால் பதம்பார்த்துவிடுகிறார்கள், அதே காவல் துறையினர். இப்படித்தான் தினந்தோறும் போலீஸார் செய்யும் பயணத்தின்போது, அட்டூழியங்கள் கணக்கு வழக்கில்லாமல் போகின்றன. அவர்களின் பயணங்களின்போதுதான் இந்த அவலட்சணங்கள் அரங்கேறுகின்றன என்றால், காவல் நிலையத்திலோ அதற்கு மேல்தான்.  

‘‘ஃபில்டர் கோல்டு ஓர் அரை பாக்கெட் வாங்கிக்க...’’
யாராவது புகார் ஒன்றைக் கொடுக்கச் சென்றுவிட்டால்போதும்... அந்தப் பரிதாப புகார்தாரர்தான் வெட்டப்படுவதற்கான அன்றைய வெள்ளாடு. முதலில், ‘தம்பீ, அந்தா தெரியுது பாரு... அதுல போயி ஒரு டீயைச் சொல்லிட்டு, அப்படியே ஃபில்டர் கோல்டு ஓர் அரை பாக்கெட் வாங்கிக்க... இப்போதைக்கு அதுபோதும்’ என்று தொடங்கும். பின்னர், அதிலிருந்து வால்பிடித்து... ‘அப்படியே ஒரு கொயர் நோட்... எங்கே சொல்லு?’ ‘ஒரு கொயர் நோட்.’ ‘அதை, ஒரு பண்டல் வாங்கிக்க’ என்று போகும். பின்னர், புகார்தாரரின் அப்பாவித்தனத்தைப் பொறுத்து... அது காலை டிபன், மதிய உணவு வரை கொண்டு போய்விடும். அப்படிக் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தும் ஒரு பிரயோஜனமுமில்லை என்கிற நிலைதான் சமீபகாலங்களாக நடந்துவருகிறது. ‘தன்னை, தினமும் ஒருவன் ஃபாலோ செய்கிறான்’ என்று ஒரு பெண் கொடுத்த புகாரை அவசரகதியில் கவனிக்காமல் மெத்தனமாய் இருந்ததன் விளைவு, அந்தப் பெண்ணின் உயிரே காவு வாங்கப்பட்டுவிட்டது. புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி போனையே லஞ்சமாகப் பெற்ற கிரைம் பிராஞ்ச் போலீஸ் ஒருவரால், ஒரு பெண்ணின் உயிரே பரிதாபமாகப் பறிக்கப்பட்டது. 

வார - மாத ரெகுலர் மாமூல்!
ஸ்டேஷனில் இருக்கும் போலீஸாரின் நிலை இதுவென்றால்... ரோந்து என்று இரவு நேரத்தில் சுற்றும் போலீஸாரின் தொல்லையும் சொல்லிமாளாது. நடைபாதை வியாபாரிகளிடமும், தள்ளுவண்டி கடைக்காரர்களிடமும் தினப்படியாகச் சில்லறை மாமூலையும், வார - மாத ரெகுலர் மாமூலையும் வசூலிப்பது மிகவும் சாதாரணமான ஒன்றே இவர்களுக்கு.  இதுதவிர, நடைபாதை உள்ளிட்ட அத்தனை வணிகர்களின் வருமானத்திலேயே இவர்கள், தினந்தோறும் தன் வயிற்றை நிரப்பிக்கொள்வதும்... குடும்ப உறுப்பினர்களுக்கு பார்சல் கட்டி எடுத்துச்செல்வதும் வாடிக்கையாகி வருகிறது. சில சமயங்களில் மாமூலைக் கொடுக்கத் தவறினால், அதைவைத்துப் பிழைப்பு நடத்திவந்த கடையையே காலி செய்துவிடுகிறார்கள். அவர்களை, அனுசரித்துச் செல்வோரை ஆரத்தி எடுக்கிறார்கள். அடிபணியாதவர்களை அடித்துத் துன்புறுத்துகிறார்கள். ஆளும் கட்சிப் பிரமுகரோ, அந்த ஏரியாவின் முக்கியஸ்தரோ அல்லது அந்தப் பகுதியின் பெரிய செல்வந்தரோ காவல் நிலையத்துக்கு வந்துவிட்டால்போதும். தன்னுடைய பதவி, உடுத்தியிருக்கும் காக்கிச் சட்டையின் பாரம்பர்யத்தையும் பாராது வழியச் சென்று வரவேற்று உபசரிப்பார்கள். அவர்களிடம் கைகட்டி வேலை பார்க்கும் ஆட்களைப்போன்று நின்று வேடிக்கை பார்ப்பார்கள். நேர்மையாய் சில அதிகாரிகள் இருந்தாலும் அவர்களையும் உயர் அதிகாரிகள் விட்டுவைப்பதில்லை. அதை உலகுக்கு உணர்த்திய கதையும் உண்டு. 

திருடன் ஒருவன், ‘நான் திருந்திவிட்டேன்’ என்று சொன்னால்கூட அவனை விடுவதில்லை. ‘நீ திருடி, எங்களுக்குப் பங்கு கொடுக்காவிட்டால்... பழைய வழக்குகளை எல்லாம் உன்மீது போட்டு மீண்டும் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம்’ என்று மிரட்டியே திருந்தி வாழநினைக்கும் முன்னாள் திருடர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றனர். விசாரணை என்று அழைத்துச் சென்று விடியவிடிய விசாரித்து, (அடித்துத் துன்புறுத்தி) ஆளையே (லாக்கப் டெத்) முடித்துவிட்டு, ‘அக்யூஸ்ட் தற்கொலை செய்துகொண்டான் என்றோ அல்லது மாரடைப்பால் இறந்துவிட்டான்’ என்றோ கச்சிதமாக காரியத்தை முடிப்பதும் காவல் துறையின் கைதேர்ந்த கலைகளில் ஒன்று. 

மறக்க முடியாத சம்பவங்கள்!
முடிக்கப்படாத வழக்குகள், பெரிய மனிதர்களால் முடக்கப்படுவது; வேலியே பயிரை மேய்ந்த கதையாய், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் பலிகடாவாக்கப்படுவது; தெருவில் வாதிட்டுக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தையே, போலீஸ் லத்தியால் கண்டபடி தாக்கியது; ‘ஓசி’ புரோட்டா கொடுக்கவில்லை எனபதற்காக, பரோட்டா மாஸ்டரில் தொடங்கி... அந்தக் கடையை நடத்திய முதலாளிவரையில்  லத்தியால் அடித்து, காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றது... எல்லாம் காவல் துறை வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்கள். 

பயிற்சிக்கான விடை!
முழங்கால் அளவு ஷூ, முழுவதும் நனையாமல் இருக்க ரெயின் கோட் என மழைக்காலத்துக்குத் தேவையான அனைத்தையும் வைத்திருந்தாலும் பொதுமக்களுக்குச் சேவை செய்கிறவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறார்கள். பிரதமரோ, முதலமைச்சரோ, பிரபலங்களோ வருவதாக இருந்தால் மட்டும் போதும். நம் காவல் துறையினர், அன்றுதான் மொத்த உழைப்பையும் காட்டுவார்கள்; மழை கொட்டினாலும், வெயில் கொளுத்தினாலும் அசையாமல் நிற்பார்கள். அவர்கள் எடுத்த பயிற்சிக்கு அன்றுதான் விடை கிடைக்கும். இரண்டு கி.மீ தொலைவுக்கு இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்களை நிறுத்திவைத்துவிடுவார்கள். ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட, அவர்கள் கண்களுக்கு அப்போது அவசியமில்லாததாகவே தெரியும். அந்த இடைவெளியில் பொதுமக்கள் படுத்தும் தூங்கிவிடலாம். ஓர் இளைஞர் சென்னை அண்ணா சாலையில் இதுபோன்று படுத்துத் தூங்கிய சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.

வசூலிப்பதில் கில்லிகள்!
போக்குவரத்து ஒழுங்கைச் சரிசெய்ய வேண்டிய காவலர்களைக் கோடைகாலத்தில் உச்சிவெயில் வேளையின்போது பார்க்கவே முடியாது. ஏதாவது ஒரு மரத்தின் நிழலிலோ... எவரும் சற்றென்று பார்த்திர முடியாத கடைக்குள்ளேதான் நின்றுகொண்டிருப்பார்கள். ஆனால், மாதக் கடைசியில் மாலை வேளை வந்துவிட்டால் போதும். இரும்புத் தடுப்பை எங்கிருந்துதான் தள்ளிக்கொண்டு வருகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. வேலையைக் கச்சிதமாக முடிப்பதற்கு வசதியாகத் தடுப்புகளைப் போட்டு வசூலிப்பதில் வருமானவரித் துறை அதிகாரிகளைவிட இவர்கள் கில்லிகள். ‘லைசென்ஸ் இல்லை; இன்சூரன்ஸ் இல்லை; ஹெல்மெட் போடவில்லை; நம்பர் பிளேட் மாற்றவில்லை’ என ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி காசைக் கறந்துவிடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஓட்டிச்செல்லும் டூவீலர்களில் இவை அனைத்தும் முறையாக இருக்கிறதா என யாரும் பார்ப்பதில்லை. முக்கால்வாசி காவலர்கள் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டிச்செல்கிறார்கள். அவர்களை யாராவது தடுத்து நிறுத்தி அபராதம் விதித்திருக்கிறார்களா.... இல்லையே? 

அதுபோல் ஒரு பைக்கில், குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களையும் (நான்கு பேர்) ஏற்றிக்கொண்டு சவாரி செய்கிறார்கள். இவர்களைக் கேட்க எந்த விதிமுறையும் நாட்டில் இல்லையே? கேட்டால், இவர்கள் காவலர்கள்... நாட்டு மக்களுக்குச் சேவை செய்பவர்கள். ‘காவல் துறை உங்கள் நண்பன்’ என்று சொல்லும் போலீஸார், முதலில் தம்மைத் திருத்திக்கொண்டு... அப்புறம் அல்லவா நண்பர்களைத் திருத்த வேண்டும். நண்பர்களிடமே பிடுங்கித் தின்று, நண்பர்களையே வேட்டையாடி நயவஞ்சகச் செயல் செய்யும் போலீஸார்தான் நம்மைக் காப்பவர்களா’’ என புலம்பித் தீர்க்கின்றனர் அவர்களிடம் காயம்பட்ட பொதுமக்களில் சிலர்.

‘‘இந்தத் துறைக்கு ஒத்துவராத ஒன்று!’’
‘‘உங்கள் மீது இப்படியான கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே. அதை, எப்படி நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எடுத்துக்கொள்கிறீர்கள்?’’ என்று காக்கிச் சீருடைக்குள் அடைந்திருந்த நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மற்ற அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள்போல் எங்களுக்குக் கிடைப்பதில்லை. அதனால், குறுக்குவழியில் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. லஞ்சம் கொடுத்து வேலைக்குவரும் காவலர்கள், இதுபோன்றுதான் சம்பாதிக்க வேண்டியுள்ளது. இரவு, பகல் என்று டூட்டி இருக்கிறது. கொலை, கொள்ளை, விபத்து, பந்தோபஸ்து என பலதரப்பட்ட கேஸ்களுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், அரசியல்வாதிகளிடமும், அட்ரஸே இல்லாத ரவுடிகளிடமும் அவப்பெயர் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. ‘நேர்மையாக இருக்க வேண்டும்’ என்பது இந்தத் துறைக்கு ஒத்துவராத ஒன்று. அதனால்தான் பொதுமக்கள் போலீஸைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். நமக்கும் பொதுமக்களுக்கும் புரியாதது ஒன்றுதான். இதுபோன்ற தவறுகளுக்குக் காரணம், அதிகாரிகளா... ஆட்சியாளர்களா?’’ என்றார் ஒன்றுமே தெரியாதவாறு.

இப்போது சொல்லுங்கள்! காவல் துறை உங்கள் நண்பனா..?

- ஜெ.பிரகாஷ்

Thursday, October 20, 2016

பா.விஜய்யின் மறக்க முடியாத அனுபவம்!

பா.விஜய்யின் மறக்க முடியாத அனுபவம்! - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

‘‘ஒரு தோல்வி ஒன்பது வெற்றிகளுக்குச் சமம்’’ என்றவர் வித்தகக் கவிஞர் பா.விஜய். அவருடைய பிறந்த தினம் இன்று.

இவர், ‘கோயில் நகர’மான கும்பகோணத்தைச் சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரே அவரது பிறந்த ஊர். அங்கு பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கு சரஸ்வதியாய் இருந்து... பாடம் புகட்டிய சரஸ்வதி என்ற ஆசிரியைக்கும் 1974-ம் ஆண்டு மகனாய் பிறந்தார். அவர்களின் ஒரே மகனான பா.விஜய், பெற்றோரிடம் தான் என்ன கேட்டாலும் வாங்கித் தரும் அளவுக்குச் செல்லமாக வளர்க்கப்பட்டார். அவர்களுடைய கனவு, பா.விஜயை நோக்கியே இருந்தது. படிப்பைவிட கவிதை, கதை, கட்டுரை எழுதுவதில் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார்; எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளைச் சுமந்து வந்தார். பரிசுகளும், சான்றிதழ்களும் பா.விஜய்யை பள்ளியில் பிரபலமாக்கின. இதர போட்டிகளில் போட்டி போட்டு வெற்றிபெற முடிந்த பா.விஜய்யால், இவர் படித்த வகுப்பில், பாடத்தில் முன்னொக்கிச் செல்லமுடியவில்லை.

‘‘பேப்பர் என்பதால், நம்பர் விடுபட்டிருக்கும்!’’
1993-94-ம் ஆண்டு ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருந்தார். அதற்குள் அவருடைய பெற்றோர், என்ஜினியரிங் படிப்பதற்காக விண்ணப்பப் படிவத்தை வாங்கி வந்துவிட்டனர். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தது. அன்று, பேப்பரில் நம்பர் வரும் காலம் என்பதால், பிரபலமான பேப்பர் நிறுவனத்துக்கே சென்று பேப்பரை வாங்கிப் பார்த்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர் நம்பரைத் தவிர, மற்ற நம்பர்கள் இருந்தன. கண்ணீரும் கவலையும் அவர் மனதை வாட்டியபோதிலும்... அதே நிலையில், வீட்டுக்குச் சென்றவரை தன் மனக்கண்ணால் புரிந்துகொண்டார் அவரது அன்னை. பிள்ளையின் மனம் எப்படியிருக்கிறது என்பது பெற்றவருக்குத்தானே தெரியும். பல மாணவர்களின் மனதைப் புரிந்துகொள்ளும் ஓர் ஆசிரியைக்கு, தன் மகனின் மனநிலையைப் புரிந்துகொள்வதிலா கஷ்டம். அதற்கான காரணம் தெரிந்தது, அவரது அன்னைக்கு. ‘‘பேப்பர் என்பதால், நம்பர் விடுபட்டிருக்கும்’’ என்று ஆறுதல் கூறினர் உறவினர்கள்.

‘‘அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்!’’
ஒருவேளை, அப்படிக்கூட நடந்திருக்கலாம் என்கிற ஆசையில் பள்ளிக்கு ஓடிப்போய்ப் பார்த்தார் பா.விஜய். அங்கேயும் ஏமாற்றமே மிஞ்சியது. இயற்பியல், வேதியியல், கணிதம் இவை மூன்றைத் தவிர மற்ற பாடங்களில் தேர்ச்சி. அப்புறம், எப்படி என்ஜினியரிங் படிக்க முடியும்? பெற்றோரின் கனவுக் கோட்டை தகர்ந்தது. தேர்வில் தோற்றதால், தாம் எதற்கும் தகுதியில்லை என்று எண்ணினார்; எதிர்காலம் சிதைந்து விட்டது என்று ஏங்கினார்; வாழ்க்கையே முடிந்து விட்டது என்று வருந்தினார்; எங்கும் நகர முடியாமல் மனம் நொந்துபோனார். அந்தச் சமயத்தில், ‘உற்றநேரத்தில் தோள் கொடுப்பான் தோழன்’ என்கிற முதுமொழிக்கு ஈடாய் அவருக்கும் ஒரு தோழன் கிடைத்தார். அது, வேறு யாருமல்ல. அவருடைய அப்பா. தோழனாய்ச் சென்று... அவருடைய தோளைத் தொட்டு, ‘‘அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம். நீ வருத்தப்படாதே’’ என்று அவரின் மனதைத் தேற்றினார்.

‘‘உனக்குத்தான் கவிதை, கதையெல்லாம் எழுத வருதே...’’
அவருடைய வார்த்தைகளிலிருந்து நம்பிக்கை பிறந்தது. பின்வந்த நாட்களில் மீண்டும் அந்தப் பாடங்களைப் படித்தார்; தேர்வெழுதினார். ஆனாலும், அவர் மீண்டும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது. தோல்வியிலிருந்து விடை காண முற்பட்டார்; தொன்மையான தமிழ்மொழியில் உள்ள இலக்கிய, இலக்கண நூல்களுடன் உறவாடினார்; அதற்கு, தூண்டுகோலாய் அவரது தந்தை விளங்கினார். அவர்தான், ‘‘உனக்குத்தான் கவிதை, கதையெல்லாம் நல்லா எழுத வருதே... திரைப்படங்களுக்குப் பாட்டு எழுத முயற்சி செய்யலாமே’’ என்று ஊக்கப்படுத்தினார். அதற்கான பாதையில்... தேடலில்... பயிற்சியில் பா.விஜய்யும் நகர ஆரம்பித்தார்.

பாக்யராஜ் மூலம் வாய்ப்பு!
அந்தத் தேடலுக்கான திரைப்பயணம் திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ் மூலம் கிடைத்தது. காலம் காலமாய் காதலின் சின்னமாய் போற்றப்படும் தாஜ்மஹாலைப் பற்றி... அதாவது, அதன் மாதிரிப் படம் எப்படி வந்தது என்பதைப் பற்றி பாக்யராஜிடம் விளக்கினார் பா.விஜய். அப்படியொரு கதையைச் சொனனதோடு மட்டுமின்றி, அடுத்தடுத்து நீரோ, கஜினி, பிரிதிவிராஜன், சரபோஜி மகாராஜா போன்றவர்களைப் பற்றியும் கூறிப் பிரமிப்பூட்டினார் பா.விஜய். இவ்வளவு விஷயங்களைக் கையில் வைத்திருந்த கவிஞரைத் தன் கூட வைத்துக்கொண்டார் பாக்யராஜ். திரைவானில் உலா வருவதற்கு வழிகாட்டினார்; தன்னுடைய படத்தில் பாடல் எழுத வாய்ப்புத் தந்தார்.
‘உன்னைப்போல் ஒருத்தி
மண்ணிலே பிறக்கவில்லை...
என்னைப்போல் யாரும்
உன்னைத்தான் ரசிக்கவில்லை’ - என்ற ஒரு காதல்மயமான பாடலை ‘ஞானப்பழம்’ என்ற படத்தில் எழுதினார்.

அந்தப் பாடல், அவரை திரை உலகில் மேலும் தீவிரப்படுத்தியது. தொடர்ந்து பாடல்கள் எழுதிய பா.விஜய், தன்னம்பிக்கைக்கான ஒரு பாடலை இயக்குநர் சேரன் மூலம் படைத்தார். ‘ஆட்டோகிராஃப்’ படத்தில், ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ என்கிற பாடல்தான் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. பட்டிதொட்டி மட்டுமல்லாது, பலருடைய உதடுகளிலும் அந்தப் பாடல் முணுமுணுக்கத் தொடங்கியது. போராடும் மனிதர்களுக்கு நம்பிக்கையைத் தந்த அந்தப் பாடல், தேசிய விருதுபெற்றது. அது மட்டுமல்லாது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாடநூலிலும் இடம்பெற்றது.

‘‘வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்!’’
‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடலுக்காக... தேசிய விருது வாங்குவதற்கு முன், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை தன் குடும்பத்துடன் சந்தித்து உரையாடினார் பா.விஜய். அப்போது, அந்தப் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டாராம் அப்துல் கலாம். பாட்டுப் பாடுவது பற்றி யோசிக்காத பா.விஜய், கொஞ்சம் அதிர்ச்சியோடு பாடியிருக்கிறார். அவரோடு, அவர் மனைவியையும் சேர்ந்து பாடச் சொல்லிக் கேட்டிருக்கிறார் கலாம். இது தவிர, ‘‘சுதந்திர இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதை பாரதி, தன்னுடைய ‘வெள்ளிப் பனி மலையின் மீது...’ என்ற பாடலில் சொல்லியிருப்பார். அதேபோன்று, நீங்களும் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒரு கனவுப் பட்டியலுடன் ஒரு திரைப் பாடல் எழுதுங்கள்’’ என்று வேண்டுகோள் வைத்தாராம். ‘‘இது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்’’ என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் நம் கவிஞர்.

அதில் வரும்,
‘ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்’ - என்கிற வரிகள் நிச்சயமாக எல்லாருடைய வாழ்விலும் நிஜமாகுபவை. இதுதவிர, ‘இளைஞன்’ படத்தில், தோழா... வானம் தூரம் இல்லை என்கிற பாடலும், ‘ஏழாம் அறிவு’ படத்தில் இடம்பெற்ற இன்னும் என்ன தோழா என்ற பாடலும் தன்னம்பிக்கைக்குரிய பாடல்களாக உள்ளன. மனம் உடைந்த நிலையில், வாழ்வே வெறுத்துவிட்டதாக விரக்தி அடைபவர்களுக்கு ஆறுதல் கூறும் அளவுக்குத் தன்னம்பிக்கை கவிதைகளைப் படைத்தவர் பா.விஜய். அந்த வகையில் கீழுள்ள இரண்டு கவிதைகளைச் சொல்லலாம்.
‘காயப்படாத மூங்கில்
புல்லாங்குழல் ஆகாது...
வலிபடாத வாழ்வில்
வசந்தங்கள் நுழையாது!’ - என்கிற கவிதை வாழ்க்கையில் வலி இருந்தால்தான் வசந்தம் வரும் என்பதை மெய்ப்பிக்கிறது.

‘துடியாய்த் துடி
சாதிக்க!
படியாய்ப் படி
வாதிக்க!
மரம் குடைய கோடாலி
கொண்டுபோவதில்லை
மரங்கொத்தி...
அவனவன் கையில்
ஆயிரம் ஆயுதம்’ - என்று சொல்லும் இந்தக் கவிதையில், நம்பிக்கையே மனிதனின் ஆயுதம் என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். காதல் மனதைக் காயப்படுத்தும் ஒரு செயல் என்பதை ஒரு கவிதையில் மிகவும் அழகாகச் சொல்லியிருப்பார். அந்தக் கவிதை...
‘மண்ணைப் பிசைந்தால் பாண்டம்...
மனசைப் பிசைந்தால் காதல்...
உடையக்கூடியவை எல்லாம்
உருவாவது இப்படித்தானோ?’

இதுதவிர, 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். ‘கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு’ என்று ஆரம்பிக்கும் ஒரு பாடலில் கறுப்பு நிறத்தின் வலிமையை நன்கு உணர்த்தியதோடு, அந்த நிற மனிதர்களையும் தன் ரசிகர்களாக்கினார்.

கவிதைதான் கவிஞனாக்கியது!
தன்னுடைய பாடல் வரிகளால், தன் ரசிக நெஞ்சங்களை வளைத்துக்கொண்ட கவிஞர், ‘‘பள்ளி நாட்களுக்கும் கல்லூரி நாட்களுக்கும் இடையில் நிகழ்ந்த அந்த மிகப்பெரிய மனப் போராட்டத்துக்கான விடைதான் நான் கவிஞனாகியது. எனக்குள் இருந்து கவிதை வந்தது. ஆக, கவிதைதான் என்னை முந்தி கவிஞனாக்கியது’’ என்று அவரே ஒரு நேர்காணலில் பெருமைப்படச் சொல்லியிருக்கிறார்.

கதாநாயகர்களுக்கு ஏற்றபடி டூயட் பாடல்களும், தனிப் பாடல்களும் எழுதுவதில் புகழ்பெற்றவர்கள் கவிஞர்கள். அதில், பா.விஜய்யும் கைதேர்ந்தவர். அதனால்தான் குறுகிய காலத்திலேய திரை உலகில் முன்னோக்கிப் பயணித்தார். இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாக மாறிக்கொண்டிருந்த காலத்தில், கவிஞர்களைக் கதாநாயனாக்கியது திரை உலகம். மற்ற கதாநாயகர்களுக்கு பாடல்களை எழுதிக்கொண்டிருந்த நம் கவிஞரையும் அவருடைய எழிலே அவரை கதாநாயகனாக்கியது. கதாநாயகர்களைத் தேடிப்பிடித்துப் படம் எடுக்கும் காலத்தில்... பாடல் எழுதும் எழில்மிக்க ஒரு கவிஞரே கதாநாயகராய் தோற்றமளித்தால், திரை உலகம் என்ன சும்மாவா விட்டுவிடும்?

‘‘உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்!’’
‘‘ ‘பராசக்தி’ படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம் என்று இருக்கிறேன்’’ என தன் ஆசையை முத்தமிழ் அறிஞர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார் பா.விஜய். அதற்கு அவர், ‘‘ஏன் இந்த விபரீத முயற்சி’’ எனக் கேட்டுள்ளார். அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்துள்ளார், நம் கவிஞர். ‘‘படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் உன்னை சிவாஜியுடன் ஒப்பிட்டுச் சரியாகச் செய்யவில்லை என்று கூற மிக அதிக சதவிகித வாய்ப்பு இருக்கிறது’’ என்று சொல்லியுள்ளார் கருணாநிதி. உடனே, அந்த எண்ணத்தைக் கைவிட்டார் நம் கவிஞர். பிறகு கருணாநிதியே, ‘‘ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய, ‘தாய்’ நாவலைப் பண்ணலாமே... அது, உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்’’ என்று சொல்ல... அப்போதே அவருடைய எழுத்தோவியத்தில் (‘தாய்’ நாவலின் தமிழாக்கத்தில்) ‘இளைஞனி’ல் கதாநாயகனாய் களமிறங்கினார் நம் பாடலாசிரியர் பா.விஜய். அதன்பிறகு, இளையோர்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வெள்ளித் திரைக்கு ஒரு புதுமுகம் கிடைத்தது; ‘ஞாபகங்கள்’, ‘ருத்ர மாதேவி’, ‘நையப்புடை’, ‘ஸ்ட்ராபெர்ரி’ என அவரது நடிப்புப் பயணம், தொடர்ந்து பிரவேசித்துக்கொண்டிருக்கிறது.

‘‘என் திருமணமே மரபுக்கவிதையை எழுதிய ஒரு மனநிலைதான்!’’
எவருக்குமே ஒரு பயணத்தோடு மற்றொரு பயணம் சேர்ந்துகொள்வது வழக்கம். அதுபோல் நம் கவிஞரையும், வாழ்க்கை என்ற பயணம் வளைத்துக்கொண்டது. உட்கோட்டை என்ற ஊரில் இருந்த அவரது உறவுப் பெண்ணான லேனா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர்களுடைய விருப்பத்துக்கு இணங்க நடைபெற்ற அவருடைய திருமணத்தில் நடிகர்கள் பாக்யராஜ், சத்யராஜ், சேரன், ரமேஷ் கண்ணா, திலகவதி ஐ.பி.எஸ் போன்றவர்கள் கலந்து கொண்டனர். தன்னுடைய திருமண நிகழ்வைக்கூட, ‘‘மிக அற்புதமான ஒரு மரபுக்கவிதையை எழுதிய ஒரு மனநிலையில் அந்தத் திருமணம் நடைபெற்றது’’ என்று வர்ணிக்கிறார் நம் கவிஞர். அவர்களுடைய இல்லற வாழ்வின் வெளிச்சமாய் விஷ்வா, விஸ்ணா என்ற இரண்டு விதைகள் விருட்சம் பெற்றன.

ஒரே நாளில் 12 நூல்கள்!
‘உடைந்த நிலாக்கள்’, ‘கண்ணாடி கல்வெட்டுகள்’, ‘காட்டோடு ஒரு காதல்’, ‘நந்தவனத்து நட்சத்திரங்கள்’, ‘வானவில் பூங்கா’, ‘ஒரு கூடை நிலா’, ‘தூரிகை துப்பாக்கியாகிறது’, ‘நிழலில் கிடைத்த நிம்மதி’, ‘வள்ளுவர் தோட்டம்’, ‘அரண்மனை ரகசியம்’, ‘மஞ்சள் பறவை’, ‘கடவுள் வருகிறான் ஜாக்கிரதை’, ‘கறுப்பழகி’, ‘ஐஸ்கட்டி அழகி’,  ‘நம்பிக்கையுடன்’, ‘தோற்பது கடினம்’, ‘செய்’ போன்ற சமூகம், காதல், காவியம், தன்னம்பிக்கை, சினிமா சார்ந்த 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ஒரே நாளில் தன்னுடைய 12 நூல்களை வெளியிட்டுச் சாதனை படைத்தார் பா.விஜய். அந்த வெளியீட்டின்போதுதான் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியால், ‘வித்தகக் கவிஞர்’ என்று பட்டம் சூட்டப்பட்டார். சமூகப் பணிகளுக்காக, ‘இ3’ என்ற இளைஞர் இலக்கிய இயக்கத்தை நிறுவிச் செயலாற்றி வருகிறார்.

ஒரு விழாவின்போது வாலிப கவிஞர் வாலி, ‘‘சினிமாவில் என்னுடைய வாரிசு பா.விஜய். அவர் மட்டுமே என்னுடைய வாரிசாக இருக்க முடியும்’’ என்று தனது கலையுலக வாரிசாக பா.விஜய்யை அறிவித்தார்.

‘‘வாழ்க்கையில் ஒரே இடத்தில் தேங்கி நிற்பது எனக்குப் பிடிக்காத ஒன்று. அடுத்தடுத்து என்று போய்க்கொண்டே இருக்க வேண்டும்’’ என தன்னம்பிக்கையுடன் சொல்லும் பா.விஜய், அதற்கான பயணங்களில் இன்றும் சென்றுகொண்டிருக்கிறார்.

பா.விஜய்யின் பயணம் சிறக்க வாழ்த்துகள்!

- ஜெ.பிரகாஷ்

Monday, October 17, 2016

சீசரின் நண்பன் கண்ணதாசன்...! - நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

‘‘யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாறநினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்’’ என்றவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய நினைவு தினம் இன்று.
‘‘ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி!’’
மருது பாண்டியர்கள் நீதி தவறாது ஆட்சி செய்த சிவகங்கைச் சீமையின் சிறுகூடல்பட்டியில் வசித்த சாத்தப்பன் - விசாலாட்சி என்ற தம்பதியருக்கு எட்டாவது மகனாய் பிறந்தவர் முத்து. அந்த முத்துதான் பின்னாளில் கண்ணதாசன் என்ற முத்தாய் ஜொலித்தார். பள்ளிக்கூடத்துக்கு மூன்று ரூபாய் கட்டமுடியாத நிலையில், பலமுறை வெளியே அனுப்பப்பட்டார். இறுதியில் ஏட்டுக் கல்வியை எட்டாம் வகுப்போடு நிறுத்திக்கொண்ட கண்ணதாசன், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் தலைமை ஆசிரியராய் இருந்த பள்ளியில் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி வீட்டுக்குச் சென்றுவிடுவார். ஏட்டுக்கல்விக்குத்தான் விடை கொடுத்தாரே தவிர, எழுதுவதற்கு விடை கொடுக்கவில்லை. தன் வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த பாப்பாத்தி ஊருணிக் கரையில் அமர்ந்து எதையாவது எழுதிக் கொண்டிருந்தார். வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுத் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டதோடு அதையும் பாடிக் கொண்டிருப்பார். இதைக் கேட்ட பக்கத்து வீட்டு ஆச்சி, ‘‘என்ன நம்ம முத்து பாட்டுல மொத ரெண்டு வரிகள மட்டுமே பாடிக்கிட்டே இருக்கான். முழுசும் பாட வராதா’’ என கவிஞரின் தாயாரிடம் கேட்க... அதற்கு அவர், ‘‘அடி போடி பைத்தியக்காரி... எம் மகன் ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி. அவனுக்கா தெரியாது’’ என்று அன்றே தன் மகனைப் புகழ் ஏணியில் ஏற்றிப் பெருமைப்படுத்தினார்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலு படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69702-kannadasan-memorial-day-special-article.art
நன்றி: விகடன் இணையதளம்

'தனியொருவனுக்கு உணவில்லை எனில்...' #WorldFoodDay

‘‘உன்னிடம் பணம் இல்லாவிட்டால் உணவே பிரச்னை. பணம் இருந்தால் காதலே சுகம். ஆனால், இரண்டும் இருந்தால் அதுவே சுகவாழ்வு’’ என்றார் அமெரிக்க நாவலாசிரியர் ஜெ.பி.டொன்லெவி. 
உணவு, உடை, உறைவிடம் மூன்றும் மனிதனின் அத்தியாவசியத் தேவைகள். இதில் முதன்மையானது உணவு! மனிதனுக்கு மட்டுமல்ல... உயிரினங்கள் அனைத்துக்கும் உணவே பிரதானத் தேவை. உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவுத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உணவுத் தினத்தின் நோக்கம்!
கடந்த 1979-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்தத் தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளில் ஆண்டுதோறும் 150-க்கும் மேற்பட்ட நாடுகள் உலக உணவுத் தினத்தைச் சிறப்பிக்கின்றன. ‘அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கத்தில் உலக உணவுத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உணவு தொடர்பான பிரச்னையில் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதுவும் இதன் முக்கிய நோக்கம். உணவுப் பஞ்சமும், விலைவாசி ஏற்றமும் பல நாடுகளில் ஆட்சிக் கட்டிலையே அடியோடு சாய்த்திருக்கின்றன. அதனால்தான் பாரதி, ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69690-world-food-day-special-article.art

நன்றி: விகடன் இணையதளம்

Wednesday, October 12, 2016

நான் மரம் பேசுகிறேன்!

‘‘மழை, நிழல் மட்டுமல்ல... பறவைகளுக்கு வசிப்பிடமும், கால்நடைகளுக்குத் தழையும், மனிதர்களுக்குச் சகலமும் தருகிறேன். மண்ணரிப்பையும் தடுக்கிறேன். இப்படி எல்லோருக்கும் எல்லாமும் தரும் என்னை, ஏன் வெட்டுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. ஒவ்வோர் ஆண்டும் புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் அழிந்துவிடுகிறேன். அது இயற்கை. அதை, மாற்ற முடியாது. ஆனால், சாலை விரிவாக்கம், வீடு கட்டுதல், உயர் அழுத்த மின்பாதை கோபுரம் அமைத்தல் போன்ற காரணங்களால் என்னை அகற்றுகிறார்களே... அதை, எங்கே போய்ச் சொல்வது? என் பயன் அறியாத சில மானிட ஜென்மங்கள், போராட்டம் என்ற பெயரில் என்னை வெட்டிச் சாய்க்கின்றன. இப்படித் தினந்தோறும் நான் அழிக்கப்படுவதால், சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைகிறது... வெப்பச்சலனம் ஏற்படுகிறது... மழைப்பொழிவு குறைகிறது. இதற்கு எல்லாம் யார் காரணம்? நீங்கள்தானே... இப்படி என்னைப்பற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கின்றன. இதையெல்லாம் சொல்வது யாராக இருக்கலாம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம்... நான் மரம்தான் பேசுகிறேன்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/68381-article-about-green-revolution-and-tree.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: விகடன் இணையதளம்

Tuesday, October 11, 2016

மு.வ-வின் பேராவல்! நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

‘‘நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் எத்தனையோ பேர் கலங்கிக் கண்ணீர் வடித்து மாய்ந்திருக்கிறார்கள்; மாய்ந்துவருகிறார்கள். வல்லமை மட்டும் பெற்றவர்களும் எதிர்பாராதவகையில் நசுக்குண்டு அழிகிறார்கள். குடும்பங்கள் முதல் நாடுகள் வரையில் இதற்குச் சான்றுகள் காணலாம்’’ என்று தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டவர் தமிழறிஞர் மு.வரதராசனார். அவருடைய நினைவுதினம் இன்று. 
‘‘தமிழர்க்கு நல்ல பண்புகள் பல உண்டு. ஆயினும், பொதுவாகத் தமிழன் வாழ்வு நலிந்துள்ளது எனக் கூறலாம். காரணம் என்ன? தமிழரிடையே சில குறைகளும் இருத்தல்கூடும் அன்றோ?’’ அதற்காகத்தான் ‘தம்பிக்கு’ எனத் தலைப்பிட்டுக் கடிதங்களை எழுத ஆரம்பித்தார் மு.வரதராசனார்.
இந்தக் கட்டுரையை மேலும் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69322-memories-of-mu-varadarajan.art
நன்றி: விகடன் இணையதளம்

'ஆர் யூ ஓக்கே?'. இன்று உலக மனநோய் தினம்

னம் அலை பாயப்படுவதாலேயே அது குரங்கு என அழைக்கப்படுவது உண்டு. அந்த மனதைக்கூட நாம் ஒழுங்காய் வைத்துக்கொள்ளாவிட்டால், மனநோய்க்கு ஆளாகிவிடுவோம். ‘சிந்தனைக்கும் மனநோய்க்கும் தொடர்பு உண்டு’ என்கின்றனர் அறிஞர்கள். அந்த நோய்க்கு மனதை ஆட்படுத்திவிடாமல் இருப்பது நம்முடைய கடமை. கல்விக்குப் பெரும் தடையாக இருப்பது மனநோயே ஆகும். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி மனநல தினம் கொண்டாடப்படுகிறது. 
எதிலும் நாட்டமின்மை, தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், கட்டுப்படுத்த முடியாமல் திரும்பத் திரும்ப ஏற்படும் எண்ணங்கள் அல்லது செயல்கள், செக்ஸ் பிரச்னைகள், தானாகப் பேசுதல் அல்லது சிரித்தல், ஆக்ரோஷம் போன்ற காரணம் கண்டுபிடிக்க முடியாத நோய்களாலும், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலும் மனநோய் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் தானாகவோ, வாழ்க்கைச் சூழ்நிலைகளினாலோ அல்லது பல்வேறு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களினாலோ உண்டாகலாம்.
இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து  மேலும் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69329-mental-suicide.art
நன்றி: விகடன் இணையதளம்

Monday, October 10, 2016

எம்.ஜி.ஆரின் நான்காவது கால்! பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு பகிர்வு

அண்ணாமலை, முத்துக்குமார்,வாசன் என திரை உலகில் மின்னும்இளங்கவிஞர்களுக்கு மட்டும் காலன் சீக்கிரமே நாள் குறித்துவிடுகிறான் போல. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாய்ப் போய்ச் சேர்ந்தவர்தான் கவிஞர் கல்யாணசுந்தரம். அவருடைய நினைவுநாள் இன்று.
என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் புகழப்பட்டவர் இந்த மக்கள் கவிஞர். தமிழ்த் திரையுலகில் பாடல் புனைந்தவர்கள் பலர். அதிலும் குறுகிய காலத்திலேயே வளர்ச்சியடைந்தவர்கள் சிலர். இளம்வயதிலேயே தன்னுடைய பாடல்களில் பொதுவுடைமை கருத்துகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர் கல்யாணசுந்தரம்.
மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/69286-trtibute-to-the-great-poet-pattukottai-kalyanasundaram.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: விகடன்  இணையதளம்

விமானப் படையில் புதிய ரக போர் விமானம்!

ம் நாட்டுப் பாதுகாப்புப் படைகளின் ஓர் அங்கமாக விளங்குவது இந்திய விமானப்படை. இது, போரின்போது எதிரி நாடுகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து நம் நாட்டைப் பாதுகாப்பதோடு, அதுபோன்ற தாக்குதலையும் நடத்தக்கூடியது. இது, 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப் படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 84-வது விமானப் படை தினம் கொண்டாடப்படுகிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நம் நாட்டுப் பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவாக இந்திய விமானப் படை மாறியது.

இதில், சுமார் 1,130 போர் விமானங்களும், 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் உள்ளன. சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் இந்தப் படையில் உள்ளனர். உலகின் நான்காவது பெரிய விமானப் படையாக நம் இந்திய விமானப் படை திகழ்கிறது. இதற்கு ஜனாதிபதியே முதல் பெரும்படைத் தலைவராக உள்ளார்.


மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69282-new-fighter-jetplanes-in-indian-airforce.art

நன்றி: விக்டன் இணையதளம்

இன்று உலக தபால் தினம்!

றிவியலின் வளர்ச்சியால் உலகில் நாள்தோறும் எண்ணற்ற மாற்றங்கள். இன்டர்நெட், இமெயில், ஃபேக்ஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று பலவகையான நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இன்றைய அறிவியல் உலகம் சுருங்கிவிட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் நேரடியாகவே அனைத்துச் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும், ஆடியோக்களும் பரிமாறப்படுகின்றன. ஆனால், பழங்காலத்தில் இத்தகைய வசதி எதுவும் இல்லை. முதலில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஓலை பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு, காகிதத்தின் வரவால் தபால் உபயோகப்படுத்தப்பட்டது. அத்தகைய தபால் தினம் இன்று.
அறிவியல் தொழில்நுட்பத்தால் இன்றைய தலைமுறையினர் தபால் எழுதுவதையே முற்றிலும் குறைத்துவிட்டனர். இதனால் அவர்களிடம் சுயமாகக் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும், அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் தபால் துறை ஏதாவது ஒரு வழியில் முக்கியப் பங்காற்றுகிறது. தற்போது அலுவலக தொடர்பான கடிதங்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியைத் தபால் துறையே செய்துவருகிறது.

இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69304-world-post-day.art
நன்றி: விகடன் இணையதளம்

கறுப்புத் துணிகளை வாங்கிய பக்தவத்சலம்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

“எனது தமிழாசிரியர் உ.வே.சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்” என்றவர் தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம். அவருடைய பிறந்த தினம் இன்று.
‘பல்கலைக்கழகப் படிப்புக்குச் சமமானவர்!’
‘‘இவரோடு பழகுவது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குச் சமமானது’’ என்று கூறியுள்ளனர், இவருடைய நெருக்கமானவர்கள். சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இலக்கணம் வகுத்தவர்; எதிர் தரப்பினரின் மனம் புண்படாமல் தனது கருத்தைப் பதிவுசெய்வதில் வல்லவர்; ராஜாஜி தன்மேல் வைத்த நம்பிக்கைக்குரியவராக வாழ்ந்தவர்; பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மை, தூய்மையைக் கடைப்பிடித்தவர். அதனால்தான், “பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும் என்னும் உண்மையை வாழ்ந்துகாட்டுபவர் பக்தவத்சலம்” என்றார் முன்னாள் மத்திய அமைச்சரான ஓ.வி.அளகேசன்.
கறுப்புத் துணிகளை வாங்கினார்!
ராஜாஜி மந்திரி சபையில், அமைச்சராக இருந்தசமயம் அரக்கோணத்துக்குப் பேசச் சென்றார் பக்தவத்சலம்.  அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் அவருக்கு கறுப்புத் துணியை வீசி எறிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். உடனே, அவர்களை அழைத்து அவர்களிடம் இருந்த கறுப்புத் துணிகளை வாங்கிக்கொண்டு, ‘‘உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன். முதலமைச்சரிடமும் கூறுகிறேன்’’ என்றார். அவர்களும் அமைதியாகக் கலைந்துசென்றனர். அப்படிப்பட்ட நன்மதிப்புக்குரியவர் பக்தவத்சலம்.
மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69311-today-former-chief-minister-bakthavatsalam-birthday.art
நன்றி: விகடன் இணையதளம்

Wednesday, October 5, 2016

வரி செலுத்தாத திருப்பதி தேவஸ்தானமும்... அருண் ஜெட்லியும்!

ந்தியாவின் மிக முக்கியத் திருத்தலங்களில் திருப்பதியும் ஒன்று. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. இந்தத் திருப்பதியில், தேவஸ்தானத்துக்குச் சொந்தமாக நிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம், கோவிந்தராஜ போன்ற சத்திரங்கள் உள்ளன. இதற்காக தேவஸ்தானம், ஆண்டுதோறும் திருப்பதி நகராட்சிக்குச் சொத்துவரி செலுத்த வேண்டும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக தேவஸ்தானம் வரி செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால், வட்டியுடன் சேர்த்து வரி பாக்கி, ரூ.39 கோடியாக உயர்ந்துள்ளது.
‘‘தேவஸ்தானம், பக்தர்களுக்குச் சேவை செய்யும் நிறுவனம் என்பதால், சொத்து வரி செலுத்தத் தேவையில்லை’’ என தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். அதனால், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் திருப்பதி நகராட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/india/68592-tirumala-tirupati-devasthanam-tax-and-arun-jaitley.art
நன்றி : விகடன் இணையதளம்

'கிங்ஃபிஷர்’ பெயர் வந்தது எப்படி?

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர், இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்பச் செலுத்தவில்லை. இதையடுத்து, மார்ச் மாதம் 2-ம் தேதி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
விஜய் மல்லையா ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மத்திய அரசு, மல்லையாவின் பாஸ்போர்ட்டையும் முடக்கியது. அவருடைய எட்டாயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனாலும், எந்த வழக்கிலும் நேரில் ஆஜராகாமல் மல்லையா தவிர்த்து வருகிறார். இந்த நிலையில், மல்லையா தன்னுடைய ‘கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனம் மூலம் சேவைவரித் துறையிடம் 532 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார். இதனை மீட்கக்கோரியும், மல்லையாவின் தனிப்பட்ட விமானத்தை ஏலம் விடக்கோரிய (இந்த விமானத்தின் விலையில் 80 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே ஏலம் கேட்கப்படுகிறது என்பதால்) உத்தரவைத் திரும்பப்பெறவும் சேவைவரித் துறை சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/india/68600-how-did-the-kingfisher-get-its-name.art
நன்றி: விகடன்  இணையதளம்

வடநாட்டில் சிலப்பதிகாரத்தைப் பரப்ப குரல் கொடுத்த ம.பொ.சி...!

மிழன் என்னும் இன உணர்வை வளர்த்து, தமிழ் வழங்கும் நிலப்பகுதியை உண்மையான தமிழ்நாடு ஆக மாற்றுவதற்குச் சிலப்பதிகாரம் ஒன்றே சிறந்த கருவி’’ என்றவர் தமிழறிஞர் ம.பொ.சி. அவரது நினைவு தினம் இன்று.

தமிழகத்தில் தேசியத்துக்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப்பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். ‘மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்’ என்பதே... சுருக்கமாக, ம.பொ.சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது.

‘தமிழரசுக் கழகம்’ என்ற அமைப்பு!
நாட்டு விடுதலைப் போரில் ம.பொ.சி ஈர்க்கப்பட்டு, ஆறு முறை சிறைவாசம் அனுபவித்தார். தேசிய இயக்கமான காங்கிரஸில் இருந்தபோதும், தமிழகத்தின் உயர்வே ம.பொ.சி-யின் நோக்கமாக இருந்தது. அதன் காரணமாக 1946-ல் ‘தமிழரசுக் கழகம்’ என்ற அமைப்பை நிறுவினார். அதன் வாயிலாக, ‘மொழியின் அடிப்படையில் தமிழகம் தனி மாநிலமாக வேண்டும்’ என்ற கோரிக்கையை எழுப்பினார். அப்போது, தென் மாநிலங்கள் இணைந்து சென்னை மாகாணமாக இருந்தது. ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திராவிலிருந்து அன்று பலத்த குரல்கள் ஒலித்தன. அப்போது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட இருந்த நேரம். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ‘‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’’ என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார் ம.பொ.சி. சென்னையில் எழுந்த இந்த எதிர்ப்புக் குரலால் அடங்கிப்போனது ஆந்திரம். ‘தற்காலிகமாவது சென்னையைச் சொந்தமாக்கிக் கொள்கிறோம்’ என்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் சொல்லப்பட்டது. ஆனால், ‘‘தற்காலிகமாகக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தம்’’ என்று தன் தொண்டர்கள் படைசூழ கடுமையாகப் போராடினார் ம.பொ.சி. இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார்.

மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/69113-maposi-has-given-voice-to-spread-tamil-literature-in-north-india.art

நன்றி: விகடன் இணையதளம்

ஏன் காமராஜர் வழியை பின்பற்ற வேண்டும்...?' காமராஜர் நினைவு தினம் சிறப்பு பகிர்வு

‘‘சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்’’ என்றவர் பெருந்தலைவர் காமராஜர். அதற்குத் தகுந்தாற்போல் வாழ்ந்துகாட்டியவர் அவர். அவருடைய நினைவு தினம் இன்று. இந்திய நாட்டில் பெரும் தேசியத் தலைவர்களாகத் திகழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர், பட்டம் பெற்றவர்களாவும் வழக்குரைஞர்களாகவும் இருந்து அரசியலில் குதித்தவர்கள். ஆனால், காமராஜர் மட்டும்தான் சாதாரண கல்வியறிவு பெற்றிருந்தும் பாரதத்தின் பெருந்தலைவர்களில் ஒருவராக உயர்ந்து மக்களுக்கு வழிகாட்டியவர். 

எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் !
‘‘அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது அது மக்களுக்குக் கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது. ஆகவே, வீண் சண்டைகளை, சர்ச்சைகளை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்’’ என்றார் காமராஜர். ஆனால், எந்த அரசியல்வாதிகள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் அவர். 1953-54-ம் ஆண்டில் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நேரத்தில் முதல்வர் பதவிக்கு சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டார். முதல்வர் பதவிக்கு சுப்பிரமணியம் பெயரை பக்தவத்சலமே முன்மொழிந்தார். தேர்தலில் காமராஜர் வெற்றிபெற்றார்.

மேலும் இந்தக் கட்டுரையத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69058-why-should-we-follow-kamarajar-memorial-day-special-article.art
நன்றி: விகடன் இணையதளம்

சுப்பிரமணிய சிவாவிடம் பயந்து ஓடிய ஆசிரியர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

‘‘எப்போது எங்கே சுதந்திரம் நசுக்கப்படுகிறதோ அல்லது நசுக்கப்பட முயற்சிக்கப்படுகிறதோ, அப்போது அங்கே என்னால் முடிந்த வன்மையுடன் எனது கண்டனத்தைக் கிளப்புவது மாத்திரமன்று; எப்போதும்போல என்ன சிரமப்பட்டும் சுதந்திரம் பிரகாசிக்கச் செய்வதற்கு என்னால் முடிந்தவரையில் வேலை செய்வதும் எனது தர்மமாகும்’’ என்றவர் சுப்பிரமணிய சிவா. அவருடைய பிறந்த தினம் இன்று. 
‘‘பணத்தின் மீது ஆசையில்லை!’’
சுப்பிரமணிய சிவாவின் தாத்தா முன்சீபாக இருந்ததால், கிராம மக்களிடமிருந்து வசூல் செய்த பணத்தைக் கொண்டுவந்து எண்ணிக்கொண்டிருப்பார். அப்போது, சுப்பிரமணிய சிவா தவழ்ந்து விளையாடிக்கொண்டே தாத்தா இருக்கும் இடத்துக்குச் சென்றார். தாத்தா அந்த நாணயங்களைக் காட்டி, ‘‘உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்’’ என்று சொல்வாராம். ஆனால் சிவாவோ, நாணயங்கள் எல்லாவற்றையும் புரட்டிப்புரட்டிப் பார்த்துவிட்டுக் கடைசியில் ஒரு பைசாவை மட்டும் தேடி எடுத்துக்கொண்டாராம். ‘‘இவனுக்குப் பணத்தின் மீது ஆசையேயில்லை’’ என்று சொல்லி சிவாவைக் கட்டியணைத்து மகிழ்ந்தாராம் தாத்தா. சிறுவயதிலேயே பரமசிவன் மரப்பாவை ஒன்றைவைத்து பூஜை செய்தார் சிவா. தன் தாத்தாவிடமே ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்றவற்றைக் கற்றறிந்தார். இதனால் குழந்தை முதலே இலக்கியத்தில் ஆர்வம்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பல பக்தர்களைக்கொண்டு பிரசங்கங்கள் செய்வித்தும், பாடங்கள் சொல்லச் சொல்லியும் கேட்டுவந்தார் சிவா.
மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69129-freedom-fighter-subramaniya-sivas-birthday-special.art
நன்றி: விகடன் இணையதளம்

குழந்தையை இழந்து நின்றவருக்கு காந்தி சொன்ன வழி!

‘‘உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது’’ என்றார் மகாத்மா. அறவழியில் சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த அவருடைய பிறந்த நாள் இன்று. எல்லோருடைய மனதிலும் தேசப் பிதாவாக இருக்கும் காந்தியடிகள், ஒருமுறை அவர் தன் மகனிடமே ஆசிரமத்தில் தங்கியதற்கான பணத்தைக் கேட்டுக் கடிதம் எழுதினார். காந்தியடிகளின் புதல்வரான மணிலால் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக இந்தியாவுக்கு வந்தார்.

மகனின் வரவால் காந்தியடிகளைவிட அதிகம் சந்தோஷம் அடைந்தார் அவருடைய தாய் கஸ்தூரி பாய். சுமார் ஒரு மாதம் காலம் ஆசிரமத்தில் தங்கியிருந்த மணிலால், பிறகு பெற்றோரிடம் விடை பெற்றுக்கொண்டு தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்று சில நாட்கள் கழித்து அவருக்கு காந்தியடிகள் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘‘நீ இந்தியா வந்து எங்களோடு தங்கியதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நீ இங்கே ஆசிரமத்தில் வந்து தங்கிய வகையில் உனது உணவுக்காக ஆசிரமத்துக்குச் செலுத்தவேண்டிய தொகை ரூ.28-ஐ நீ செலுத்தாமலேயே போய்விட்டாய். எனவே, இந்தக் கடிதம் கண்டதும் பணத்தை அனுப்பிவைப்பாய் என நம்புகிறேன்’’ என்று எழுதியிருந்தார்.

மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/coverstory/69075-this-is-what-gandhiji-told-to-a-person-who-lost-his-child.art

நன்றி: விகடன்  இணையதளம்

சுவாதி - ராம்குமார்... கேள்விகள் ஆயிரம்... உண்மை என்ன?!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி, அதிகாலை 6.40 மணிக்கு, சுவாதி வெட்டிச் சிதைக்கப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியின் சடலம், தமிழகத்தை அதிரவைத்தது; அந்தக் காட்சிகள் எழுப்பிய ஓலக்குரல் தமிழகம் முழுவதும் ஒலித்தது. அன்று தொடங்கி, அடுத்துவந்த 4 நாட்களுக்கு, தமிழகத்தின் மில்லியன் டாலர் கேள்விகளாக இருந்தவை, கொலையாளி யார்... கொலையாளி எங்கே... எதற்காக இந்தப் படுகொலை என்பவைதான். ஒவ்வொரு நாளும் கேள்விகளின் அழுத்தம் தமிழகத்தை இறுக்கிக் கொண்டிருந்தபோது, நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ராம்குமாரை அடையாளம் காட்டியது போலீஸ். கைதுசெய்யப்போன அந்த நேரத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட ராம்குமார் தொடங்கி, ராயப்பேட்டை மருத்துவமனையில் சடலமாகக் கிடந்ததுவரை ராம்குமாரை ஆயிரம் ஆயிரம் கேள்விகள் சூழ்ந்திருந்தன.
மேலும் இந்தக் கட்டுரயைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/coverstory/68575-from-swathi-murder-to-ramkumar-mysterious-death.art
நன்றி: விகடன் இணையதளம்