61.அறிவார்ந்த
பிள்ளைகளைப்
பெறுவதைத்
தவிர,
வேறு
எதுவும் இல்லை.
------------------------------------------------
62.பழிச்சொல்
படாத
நற்பிள்ளைகளைப்
பெற்றால்
எழுபிறப்பும்
தீவினை சேராது!
------------------------------------------------
63.தம்பொருள்
என்பது தம்மக்கள்...
அவர்பொருள்
என்பது அவரவர்
வினையின்
செயல்கள்
-----------------------------------------------------
64.தம்
பிள்ளைகள் பிஞ்சுக்கையால்
பிசையப்பட்ட
உணவு
பெற்றோருக்கு
அமிழ்து!
---------------------------------------------------------
65.
தம்
குழந்தையின் மெய்தீண்டல்
உடலுக்கு
இன்பம்
- அக்குழந்தையின்
சொல்
கேட்பது செவிக்கு இன்பம்!
--------------------------------------------------------
66.
தம்
குழந்தையின்
சொல்
கேளாதவர்
குழல்,
யாழ்
இனிது என்பர்!
--------------------------------------------
67.கற்றவர்
அவையில் தன்
மகனை
முதன்மைப்
பெறச் செய்வதே
தந்தையின்
கடமை!
--------------------------------------------------------
68.தம்மைவிட
பிள்ளைகள்
அறிவில்
சிறந்து
விளங்கினால் -
அது
பெற்றோரைவிட
மற்றவர்க்கே மகிழ்ச்சி!
-----------------------------------------------------------------
69.மகப்பேறு
காலத்து மகிழ்ச்சியைவிட
தன்
மகன் பிறரால் சான்றோன் எனக்
கேட்பதே
பெற்ற தாய்க்கு மகிழ்ச்சி!
---------------------------------------------------------
70. --------------------------------------------
------------------------------------------------
----------------------------------------------------
அன்பானவரின் துன்பம்
கண்ணீரில் தெரிந்துவிடும்!
--------------------------------------------------------
72. அன்புடையோர்
எல்லாவற்றையும் துறப்பர்...
இல்லாதோர் ஆசைகொள்வர்!
-----------------------------------------------
73. உயிர், உடல் இணையைப்போல்
அன்பும் செயலும் இருப்பதே
அழகிய பொருத்தம்!
------------------------------------------------------
74.அன்பானது பிறரிடம்
நல்ல பற்றைத் தரும் - அதுவே
நட்பைச் சிறப்பாக்கும்!
---------------------------------------------------
75.உலகத்தில் இன்பத்துடன்
வாழ்கிறவர் பெறும் சிறப்பு
அன்பு பொருந்திய பயனாகும்!
-------------------------------------------------
76.அறத்துக்கு மட்டுமே அன்பு
துணையாகும் என அறிந்தோர்
வீரத்துக்கு ஆகாது என்பர்!
------------------------------------------------
77. எலும்பில்லாத புழுவை
வெயில் வருத்தும் - அதுபோல
அன்பில்லாதவரை அறம் கொல்லும்!
------------------------------------------------------------
78.மனதில் அன்பு இல்லாதவர்
வாழ்க்கை பாலைவனத்தில்
துளிர்க்காத மரமாகும்!
-----------------------------------------------
79.அன்பில்லாத அகத்துறுப்பு
உடையோருக்கு புறத்துறுப்பு
அழகாய் இருந்து என்ன பயன்?
-------------------------------------------------
80.அன்பினால் இயங்குவதே
உயிருடல் - அது இல்லையேல்
எலும்பு தோல் போர்த்திய வெற்றுடல்!
-------------------------------------------------------------------