Wednesday, October 5, 2016

சுப்பிரமணிய சிவாவிடம் பயந்து ஓடிய ஆசிரியர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

‘‘எப்போது எங்கே சுதந்திரம் நசுக்கப்படுகிறதோ அல்லது நசுக்கப்பட முயற்சிக்கப்படுகிறதோ, அப்போது அங்கே என்னால் முடிந்த வன்மையுடன் எனது கண்டனத்தைக் கிளப்புவது மாத்திரமன்று; எப்போதும்போல என்ன சிரமப்பட்டும் சுதந்திரம் பிரகாசிக்கச் செய்வதற்கு என்னால் முடிந்தவரையில் வேலை செய்வதும் எனது தர்மமாகும்’’ என்றவர் சுப்பிரமணிய சிவா. அவருடைய பிறந்த தினம் இன்று. 
‘‘பணத்தின் மீது ஆசையில்லை!’’
சுப்பிரமணிய சிவாவின் தாத்தா முன்சீபாக இருந்ததால், கிராம மக்களிடமிருந்து வசூல் செய்த பணத்தைக் கொண்டுவந்து எண்ணிக்கொண்டிருப்பார். அப்போது, சுப்பிரமணிய சிவா தவழ்ந்து விளையாடிக்கொண்டே தாத்தா இருக்கும் இடத்துக்குச் சென்றார். தாத்தா அந்த நாணயங்களைக் காட்டி, ‘‘உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்’’ என்று சொல்வாராம். ஆனால் சிவாவோ, நாணயங்கள் எல்லாவற்றையும் புரட்டிப்புரட்டிப் பார்த்துவிட்டுக் கடைசியில் ஒரு பைசாவை மட்டும் தேடி எடுத்துக்கொண்டாராம். ‘‘இவனுக்குப் பணத்தின் மீது ஆசையேயில்லை’’ என்று சொல்லி சிவாவைக் கட்டியணைத்து மகிழ்ந்தாராம் தாத்தா. சிறுவயதிலேயே பரமசிவன் மரப்பாவை ஒன்றைவைத்து பூஜை செய்தார் சிவா. தன் தாத்தாவிடமே ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்றவற்றைக் கற்றறிந்தார். இதனால் குழந்தை முதலே இலக்கியத்தில் ஆர்வம்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பல பக்தர்களைக்கொண்டு பிரசங்கங்கள் செய்வித்தும், பாடங்கள் சொல்லச் சொல்லியும் கேட்டுவந்தார் சிவா.
மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69129-freedom-fighter-subramaniya-sivas-birthday-special.art
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment