Monday, June 29, 2009

வானொலி




என் நெஞ்சத்தில்
உரசுகின்றாள்.....
பேட்டரியாய்!
ஆனால் - நானோ
வானொலியாய்
காதல் வார்த்தைகளை
ஒலிபரப்புகின்றேன்....
அவளோ
காதில் வாங்குவது 
கிடையாது!

Thursday, June 25, 2009

உலகம்

மனிதன் இருக்கும்வரை
வேசம்போடும் உலகம்
இறந்தபின்பு
நாடகத்தையே
கலைத்துவிடும்......

வாழ்க்கை

நீரின்றி அமையாது
உலகு.....
அவளின்றி சிறக்காது
என் வாழ்வு......

Sunday, June 21, 2009

நறுக்

கண்ணே.......
உன்னை கைபிடித்தால்
அக்னி சாட்சி......
கைவிட்டால்
கருவே சாட்சி.........

நறுக்

என்னவள்
நேற்று அழகி....
இன்று பேரழகி......
நாளை கிழவி.......

நறுக்

வாழ்க்கையே ஒரு போர்க்களம்......
அதில் வாழ்ந்தவர் ஏராளம்.....
நீயும் வாழு பேர் சொல்லலாம்.......

நறுக்

கடலோடு இந்தியா
வரலாறு சொல்கின்றது.....
கடனோடு இந்தியா
வங்கி சொல்கின்றது.....

நறுக்

நேற்று முதல்
நீ தான்......
இதில் மாற்றம்
ஏற்பட்டால்
சந்தேகம் இல்லை....
அது உன்
தங்கை தான்.....

Saturday, June 20, 2009

ஹைக்கூ

முதலில் நீ....
பின்பு வீடு....
பிறகு நாடு...

Sunday, June 14, 2009

ஏக்கம்

காற்றில் ஆடுது
அவள்
காயப்போட்ட தாவணி.....
காயத்தில் வாடுது
அவளை காதலித்த
இந்த மனசு......

Thursday, June 11, 2009

பார்வை

அவள் என்னை நோக்க
நான் அவளை நோக்க
எங்கள் இருவரையும்
நோக்கியது...
எதிர்வீட்டு நாய்.....

Tuesday, June 9, 2009

முரண்

தாவணியை தவிர்க்கும்
தளிர்களே...
கொஞ்சம் துப்பட்டாவை
தோளில் போடுங்களேன்...

கவலை

அவள் வகுப்புக்கு
வந்தால் சந்தோசம்...
வரவில்லையேல்
எனக்கு ஜலதோஷம்...

Sunday, June 7, 2009

காத்திருப்பு

வானம் ஏற்றிவைத்த
நிலா வெளிச்சத்துல
தெருவிளக்கும்
சேர்ந்து போட்டிபோட
வாசல் முற்றத்தில்
காதுகுடையும் தாத்தாவோடும்
கண்டிக்கும் பாட்டியோடும்
கதைபேசி மகிழும் அம்மாவோடும்
கண்ணாமூச்சி விளையாடும்
அக்காவோடும்
காத்திருக்கிறேன் நான்....
வேலைமுடிந்து வேர்க்கடலை
வாங்கிவரும் அப்பாவுக்காக....

நினைப்பு

கண் மூடி தூங்கினேன்
கனா வரவில்லை....
கன்னி அவளை நினைத்தேன்
உறக்கமே வரவில்லை.....

ஜாதி

அன்பே ......
நீ பாதி
நான் பாதி.....
இடையில் நமக்கேன்
ஜாதி?

பாதுகாப்பு

கண் இமைக்காமல்
பார்த்துகொள்வேன்.....
கவலைபடாதே கண்மணியே
உன்வீட்டு சொத்துகளை......

ஹைக்கூ

பூக்களை கிள்ளினேன்

வாசம் வந்தது....

பூவையவளை கிள்ளினேன்

போலீஸ் வந்தது.....

நிலவு

எனக்கும்

நிலவை பிடிக்கும்.....

நீ -

நிலவு என்பதால்....

காதலி

வாழ்விலும் சாவிலும்
என்னோடு இருப்பேன் என்று
சத்யம் செய்தவள்
இன்று
வார்த்தை தவறி விட்டாள்.....
வசதியான என் நண்பன்
கிடைத்துவிட்டதால்..........