Wednesday, October 5, 2016

வரி செலுத்தாத திருப்பதி தேவஸ்தானமும்... அருண் ஜெட்லியும்!

ந்தியாவின் மிக முக்கியத் திருத்தலங்களில் திருப்பதியும் ஒன்று. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. இந்தத் திருப்பதியில், தேவஸ்தானத்துக்குச் சொந்தமாக நிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம், கோவிந்தராஜ போன்ற சத்திரங்கள் உள்ளன. இதற்காக தேவஸ்தானம், ஆண்டுதோறும் திருப்பதி நகராட்சிக்குச் சொத்துவரி செலுத்த வேண்டும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக தேவஸ்தானம் வரி செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால், வட்டியுடன் சேர்த்து வரி பாக்கி, ரூ.39 கோடியாக உயர்ந்துள்ளது.
‘‘தேவஸ்தானம், பக்தர்களுக்குச் சேவை செய்யும் நிறுவனம் என்பதால், சொத்து வரி செலுத்தத் தேவையில்லை’’ என தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். அதனால், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் திருப்பதி நகராட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/india/68592-tirumala-tirupati-devasthanam-tax-and-arun-jaitley.art
நன்றி : விகடன் இணையதளம்

No comments:

Post a Comment