Tuesday, September 5, 2017

''என்னிடம் எளிமையான கேள்வி ஒன்று இருக்கிறது!” - இறந்த அனிதாவும்... விடை கிடைக்காத அவளது கேள்வியும்

''என்னிடம் எளிமையான கேள்வி இருக்கிறது. இங்கு எல்லோருக்கும் எல்லாமும் சரி சமமாகக் கிடைக்கிறதா... எல்லோருக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்கிறதா... எல்லோருடைய பொருளாதார நிலையும் ஒன்றுபோல இருக்கிறதா... இங்கு ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லையா...? எனக்குப் பெரிதாக அரசியல் புரிதல்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லா அரசியலும் எங்களுக்கும் தெரியும் என்பவர்கள், எனது இந்த எளிமையான கேள்விக்கு பதில் சொல்லட்டும். இங்கு யாருக்கும் எதுவும் சரிசமமாகக் கிடைக்காதபோது அனைவருக்கும் ஒற்றைத் தேர்வு என்பது யாரை ஏமாற்றும் வேலை..?  நான் கேட்கும் கேள்விகள் அனைத்தும், ஒரு தனிமனிதியின் கேள்விகள் இல்லை. கல்வியை இறுகப்பற்றி மேலே எழுந்துவிடலாம் என்ற பெரும் கனவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மாணவர்களின் கேள்விகள். இது சங்கடம் தரும் கேள்விகள்தான். ஆனால், நியாயம் கிடைக்கும்வரை இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புவேன்... எழுப்புவோம்” என்று கடந்த பத்து நாள்களுக்கு முன் சபதமிட்ட ஒரு பெண்தான், இன்று மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/101058-i-have-a-question-for-you---last-minutes-of-anitha.html

நன்றி: விகடன் இணையதளம்

அரியலூரின் மகளே... அவசரப்பட்டு விட்டாயே!

''அரியலூரின் மகளே... அவசரப்பட்டு விட்டாயே! 'ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல... உன்னைப்போலச் சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே' என்று சொன்ன, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான், ‘உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்குக் கூட எதிர்காலம் உண்டு' என்று சொன்னார். ஆனால் நீயோ, அந்த வரிகளை நினைக்காமல்... அவர் சொன்ன இன்னொரு பொன்மொழியான, 'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்பதை நினைவில் வைத்து உன் முடிவைத் தேடியிருக்கிறாயே? அவசரத்தில் நீ தேடிக்கொண்ட முடிவால், அரசாங்கத்தில் மாற்றமா நிகழ்ந்துவிடப் போகிறது? ஒருபோதும் நடக்காது. ஆனால், நீ எடுத்த இந்தத் தற்கொலை முடிவைக் கொஞ்சம் மாற்றி வேறு பாதையில் பயணித்திருந்தால், இன்னொரு சரித்திரத்தையும் நீ உருவாக்கியிருக்க முடியுமே... அதை ஏன்  நீ உணராமல் போனாய்? 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/coverstory/101152-you-made-a-hard-decision-anitha.html

நன்றி: விகடன் இணையதளம்

Thursday, July 6, 2017

'நேரு முதல் மன்மோகன் காலம் வரை... இந்திய ஜனாதிபதிகள்!' ஒரு பார்வை! #VikatanPhotoCards

'நேரு முதல் மன்மோகன் காலம் வரை... இந்திய ஜனாதிபதிகள்!' ஒரு பார்வை! #VikatanPhotoCards பற்றிய படங்களைப் பார்க்க வேண்டுமா? இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7925-presidents-from-nehru-to-manmohan-singh.album

“ஜெயலலிதாவின் அரசியல் வெறுமை இப்போது புரிகிறது!” - சட்டசபை சிரிப்பு நாயகன் அடடே துரைமுருகன்! #VikatanPhotoCards

“ஜெயலலிதாவின் அரசியல் வெறுமை இப்போது புரிகிறது!” - சட்டசபை சிரிப்பு நாயகன் அடடே துரைமுருகன்! #VikatanPhotoCards பற்றிய படங்களைப் பார்க்க வேண்டுமா?
இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7878-237310-political-quotes-by-dmk-senior-leader-durai-murugan.album

சுவாமி விவேகானந்தரின் வேத மொழிகள் 20! #VikatanPhotoCards

சுவாமி விவேகானந்தரின் வேத மொழிகள் 20! #VikatanPhotoCards பற்றிய படங்களைப் பார்க்க வேண்டுமா? இங்கே க்ளிக் செய்யவும்...

http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7912-238331-.album

ஜி.எஸ்.டி பிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்..! #VikatanPhotoCards

ஜி.எஸ்.டி பிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்..! #VikatanPhotoCards பற்றிய படங்களைப் பார்க்க வேண்டுமா? இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7899-237932-celebrities-view-on-gst.album

“பூரான்கள் என்றும் புலியாவது இல்லை!" கண்ணதாசனும் அவரது அரசியலும்! #VikatanPhotoCards

பூரான்கள் என்றும் புலியாவது இல்லை!" கண்ணதாசனும் அவரது அரசியலும்! #VikatanPhotoCards பற்றிய படங்களைப் பார்க்க வேண்டுமா?
இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7818-235502-political-life-of-poet-kannadasan.album

”என் வழி... தனி வழி!” - ராகுலின் 20 ரகசிய மொழிகள் #VIkatanPhotoCards

”என் வழி... தனி வழி!” - ராகுலின் 20 ரகசிய மொழிகள் #VIkatanPhotoCards பற்றிய படங்களைப் பார்க்க வேண்டுமா? இங்கே க்ளிக் செய்யவும்..
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7782-234439-quotes-of-rahul-gandhi.album

''மனசாட்சிப்படி நடப்பதே என் வாழ்க்கை!'' கிரண் பேடியின் 20 தத்துவங்கள் #VikatanPhotoCards

''மனசாட்சிப்படி நடப்பதே என் வாழ்க்கை!'' கிரண் பேடியின் 20 தத்துவங்கள் #VikatanPhotoCards பற்றிய படங்களைப் பார்க்க வேண்டுமா? இங்கே க்ளிக் செய்யவும்.

http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7696-232241-best-20-philosophies-of-kiran-bedi.album

ரஜினியின் அரசியலும்... பிரபலங்களின் பதில்களும்! #VikatanPhotoCards

ரஜினியின் அரசியலும்... பிரபலங்களின் பதில்களும்! #VikatanPhotoCards பற்றிய படங்களைப் பார்க்க வேண்டுமா? இங்கே க்ளிக் செய்யவும்...

http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7510-227310-reaction-of-celebrities-for-rajini-entry-to-politics.album

பி.ஜே.பி-யின் ஜனாதிபதி வேட்பாளர்... ஆதரவும்...எதிர்ப்பும்! #VikatanPhotoCards

பி.ஜே.பி-யின் ஜனாதிபதி வேட்பாளர்... ஆதரவும்...எதிர்ப்பும்! #VikatanPhotoCards
பற்றிய படங்களைப் பார்க்க வேண்டுமா?
இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7801-support-and-opposition-for-bjp-president-candidate.album

அப்போலோ முதல் போயஸ் கார்டன் வரை... தீபாவின் அரசியல் லேண்ட் மார்க்குகள்! #VikatanPhotoCards

அப்போலோ முதல் போயஸ் கார்டன் வரை... தீபாவின் அரசியல் லேண்ட் மார்க்குகள்! #VikatanPhotoCards பற்றிய படங்களைப் பார்க்க வேண்டுமா? இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7729-the-political-travel-of-deepa.album

கலைஞர் - 94' அறிந்ததும்... அறியாததும்! #VikatanPhotoStory

கலைஞர் - 94' அறிந்ததும்... அறியாததும்! #VikatanPhotoStory பற்றிய படங்களை அறிய வேண்டுமா? இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7645-unknown-facts-about-karunanidhi.album

Thursday, June 1, 2017

வைரவிழாவும்..! கருணாநிதியை புகழ்ந்த 20 பிரபலங்களும்!

வைரவிழாவும்..! கருணாநிதியை புகழ்ந்த 20 பிரபலங்களும் பற்றிய புகைப்பட ஸ்டோரியைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...

http://www.vikatan.com/news/album/general/7604-229763-celebrities-who-bestowed-few-words-upon-karunanidhi.album

நன்றி: விகடன் இணையதளம்

Friday, May 26, 2017

வைர விழாவும் கருணாநிதியின் 25 வைர வரிகளும்! #VikatanPhotoCards

வைர விழாவும் கருணாநிதியின் 25 வைர வரிகளும்! #VikatanPhotoCards பற்றித் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7582-229046-best-25-quotes-of-kalaignar-karunanidhi.album

நன்றி: விகடன் இணையதளம்

ரஜினியின் அரசியலும்... பிரபலங்களின் பதில்களும்! #VikatanPhotoCards

ரஜினியின் அரசியலும்... பிரபலங்களின் பதில்களும்! #VikatanPhotoCards பற்றித் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7510-227317-reaction-of-celebrities-for-rajini-entry-to-politics.album

நன்றி: விகடன் இணையதளம்

அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு... சாதனையும், வேதனையும்! #1YearOfADMK #VikatanPhotoCards

அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு... சாதனையும், வேதனையும்! #1YearOfADMK #VikatanPhotoCards பற்றித் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7557-228418-one-year-of-admk-review.album

நன்றி: விகடன் இணையதளம்

“ரஜினி அரசியலுக்கு வந்தால் இவரெல்லாம் காணாமல் போய்விடுவார்!” கொதிக்கும் ரசிகர்கள்

ஜினி வாய்ஸ்க்காக ஒரு கூட்டம்... அவருடைய வாய்ஸைவைத்து விளையாடுவதற்காக மற்றொரு கூட்டம்... இது, இன்று நேற்றல்ல. இருபது வருடங்களுக்கு மேலாக அவரை வைத்து அரசியல் நடத்துவதும், ஆதாயம் தேடுவதும் வாடிக்கையாகி வருகிறது. தேர்தல் நெருங்கும்போது அரசியல் கட்சிகள் அவரது ஆதரவைத் தேடுவதும், அவர் நடித்த படங்கள் ரிலீஸாகும்போது அவர் ஏதாவது பேசுவதுமே இதுபோன்ற கூட்டத்தினருக்கு விருந்தாக இருந்துவருகிறது. இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் நீண்ட நாள்களுக்குப் பிறகு மாவட்ட வாரியாகத் தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அந்தச் சமயத்தில் அவர் பேசிய கருத்துகள் அரசியல் குறித்து இருந்ததுடன், அவரும் வருங்காலத்தில் அரசியலில் குதிப்பார் என்றே தெரிகிறது. தற்போது ரஜினிகாந்த் பேசியிருக்கும் பரபரப்பான அரசியல் செய்தியால் மேலே சொன்ன கூட்டத்தினரைத் தவிர, பத்திரிகை, இணையம், இன்னும் பிறவற்றுக்கு நல்ல விருந்து கிடைத்துள்ளது. அவரும், அவருடையச் செய்தியும்தான் தற்போது அநேக இடங்களில் அதிகமாகப் பகிரப்படுகின்றன. இப்படியானச் சூழ்நிலையில், ரஜினி அரசியலில் இறங்கப் பலரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் வீரலட்சுமி உள்பட இன்னும் சிலர் ரஜினி அரசியலுக்கு வர எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரஜினி ரசிகர்களிடம் பேசினோம்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/90245-rajini-fans-comment-on-seeman-and-veeralakshmi.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: விகடன் இணையதளம்

''உடைந்த அ.தி.மு,கவும், அரசின் மகத்தான சாதனையும்!'' #1YearOfADMK

''அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒருவருடம் ஆகிவிட்டது... அதன் ஆட்சி எப்படி இருக்கிறது; அவற்றின் சாதனைகள் என்ன'' என்று அரசியல் ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்களோ, ''அதை ஏன் கேட்கிறீர்கள்... இப்படிப்பட்ட ஓர் அரசு இருக்கவே வேண்டியதில்லை'' என்றவர்கள், '' 'அண்ணன் எப்போ சாவான்... திண்ணை எப்போ காலியாகும்' என்ற  பழமொழிக்கு ஏற்பதான் தற்போதைய அ.தி.மு.க ஆட்சி இருக்கிறது'' என்றனர் ஒற்றைவரியுடன். ''சற்று விரிவாகச் சொல்லுங்கள்'' எனக் கேட்டோம். அவர்கள் சொல்ல ஆரம்பித்தனர்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/90164-split-of-the-states-leading-party-and-all-happened-in-one-year-1yearofadmk.html

நன்றி: விகடன் இணையதளம்

86 நாட்களில் முதல்வராக என்னவெல்லாம் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! #VikatanPhotoCards

86 நாட்களில் முதல்வராக என்னவெல்லாம் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! #VikatanPhotoCards பற்றித் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... 

http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7479-226488-what-did-edappadi-palanisamy-do-in-his-first-86-days-as-cm.album

நன்றி: விகடன் இணையதளம்

ரஜினி பேசிய அரசியல் வசனங்கள்..! #VikatanPhotoCards

நடிகர் ரஜினிகாந்த் பேசிய அரசியல் வசனங்கள் குறித்து தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7497-227049-political-dialogues-rajini-spoke-in-meetings.album

நன்றி: விகடன் இணையதளம்

ஜன் லோக்பால் போராளி முதல் டெல்லி முதல்வர் வரை... அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த பாதை! #VikatanPhotoStory

ஜன் லோக்பால் போராளி முதல் டெல்லி முதல்வர் வரை... அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த பாதை! #VikatanPhotoStory பற்றித் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7446-225589-political-journey-of-arvind-kejriwal.album

நன்றி: விகடன் இணையதளம்

“என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

“அழுவது எனக்குப் பிடிக்காது; அழுவதானால் இந்த இடத்தைவிட்டுச் செல்லுங்கள்” - உடல்நிலை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு... காலன், கணக்கை முடிக்க காத்திருந்த காலகட்டத்தில், ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களிடம்... ‘பாரத மணி’ என்று அழைக்கப்பட்ட கோபாலா சொன்ன வார்த்தைகள்தான் அவை. பெருமாளின் பெயர்களில் ஒன்றான கோபாலா என்ற பெயரை, தன் சிறுவயதில் கொண்டிருந்த அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... பின்னாட்களில் சுதந்திரப் போராட்டக் களத்தில் உயிரைநீத்த கோபால கிருஷ்ண கோகலேதான். அவருடைய பிறந்த தினம் இன்று.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/88774-gopal-krishna-gokhale-birthday-special-article.html

நன்றி: விகடன் இணையதளம்

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதையும்... இப்போதைய அ.தி.மு.க. நிலையும்!

ளையே காலி செய்துவிடும் அக்னி நட்சத்திர வெயில்பொழுது ஒன்றில், அலுவலகத்துக்கு விடுமுறையான ஒருநாளில், அறிவுத் தேடலுக்கு விடை சொல்லும் நூலக வாசலில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. வயதான உருவம்; வசீகரிக்கும் புன்னகை; வளைந்துகொடுக்கும் தன்மை என அவருடைய தோற்றம் இருந்தது. அமரர்களாகி விட்ட எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவம் பொறித்த படங்கள் அவருடைய சட்டையின் வெள்ளை நிறத்தையும் தாண்டி வெளியே தெரிந்தன. அ.தி.மு.க கறை வேட்டியுடனும், துண்டுடனும் காட்சியளித்த அவர், அனைத்து இதழ்களின் செய்திகளையும் படித்துவிட்டு வெளியே வந்தார். 'இன்றைய நிலைமையில் அ.தி.மு.க பற்றி இவரிடம் கேட்டால் எண்ணற்ற விஷயங்கள் வெளியே வரும்' என்று நினைத்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/88611-a-short-tale-told-by-jayalalithaa-and-current-situation-of-admk.html?artfrm=news_most_read

நன்றி: 'விகடன்'இணையதளம்

Thursday, May 4, 2017

அகிலத்தின் மூலதனம் கார்ல் மார்க்ஸ்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

''மக்களால் நான்... மக்களுக்காகவே நான்'' என்ற உணர்ச்சிமிகுந்த வார்த்தைகளை அடிக்கடி மக்களிடம் உரக்கச் சொல்லி, அவர்களுடைய உள்ளங்களில் வாழ்ந்து மறைந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், கட்சி நிகழ்வுகளிலும் அவருடைய கட்சியினர்வைக்கும் சுப நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு குட்டிக்கதைகள் சொல்வது வழக்கம். அது, அப்போதைய காலத்தைக் குறிக்கும்வகையிலோ அல்லது எதிர்க்கட்சியைத் தாக்கும்வகையிலோ இருக்கக்கூடும். சில நேரங்களில், தம்பதிகள் குறித்த கதைகளாகக்கூட இருக்கும். இப்படியான ஒரு நிகழ்வின்போதுதான் தம்பதியருக்கு ஏற்ற ஓர் அழகான குட்டிக்கதையைச் சொல்லியிருப்பார். குடும்பத்தில் ஒரு தம்பதியினர் அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு எப்படி ஒருமித்த கருத்துடனும், உள்ளன்போடும் வாழ்கிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதே அந்தக் கதை... 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/88428-do-you-know-about-the-love-between-karl-marx-and-jenny.html

நன்றி: 'விகடன்' இணையதளம்


ஆறு மாதங்களில் அ.தி.மு.கவில் நடந்த 20 மாற்றங்கள்! #VikatanPhotoCards

ஆறு மாதங்களில் அ.தி.மு.கவில் நடந்த 20 மாற்றங்கள் குறித்து படங்களுடன் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7380-223855-notable-changes-in-aiadmk-in-last-months.album
நன்றி: 'விகடன்' இணையதளம்

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

‘‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. அந்த வலியை, நாம்தான் ஏற்படுத்தினோம் என்பதை உணரும்போது மிகவும் அவமானமாக இருக்கிறது.'' - இது, திப்பு சுல்தான்  தன் தந்தையிடம் கூறிய வார்த்தைகள்... 1780-ல் காஞ்சிபுரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரான பெய்லியைச் சிறைபிடித்து, தந்தையான ஹைதர் அலியிடம் அழைத்துச் சென்றார், திப்பு சுல்தான். அப்போது பெய்லி, ‘‘திப்பு... எங்களைத் தோற்கடிக்கவில்லை. முற்றிலுமாக நாசப்படுத்திவிட்டார்’’ என்றார். ஆங்கிலேயர் வரலாற்றில் அவர்கள் சந்தித்த முதல் தோல்வி அது. அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் திப்புவின் போர்த் திறனைப் பதிவுசெய்தன. ஆங்கிலேயர்களோ, அதுகுறித்து பதற்றம் அடைந்தனர்; பாடம் நடத்தினர்; பழிவாங்க காத்திருந்தனர்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/politics/88329-lesson-from-tipu-sultan-to-today-politicians-memorial-day-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

ஜெயலலிதா சமாதியும்... திருப்புமுனைகளும்! #VikatanPhotoCards

ஜெயலலிதா சமாதியில் நடந்த திருப்புமுனைகள் பற்றி சுவையான சம்பவங்களைப் படங்களுடன் காண...


http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7364-223536-turning-points-in-tn-politics-after-jayalalithaas-demise.album


நன்றி: 'விகடன்' இணையதளம்

உழைப்பாளிகள் பலவிதம்!

பலவித உழைப்பாளிகளையும், அவர்களுடைய படங்களையும் காண இங்கே க்ளிக் செய்யவும்...

http://www.vikatan.com/news/album/general/7359-223453-let-us-know-about-various-workers-on-may-day.album

நன்றி: 'விகடன்' இணையதளம்

தொழிலாளர்கள் புரட்சியில் கார்ல் மார்க்ஸ்! - மே தின பகிர்வு

விடை கொடுக்காத தேசத்தில் வீறுகொண்டு எழுந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்கிறபோது அதற்கான வழியைக் கையில் எடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால், அதன் விதை அழுகலானதாக இருக்கக்கூடாது; ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் எதுவும் சாத்தியமாகும்; சரித்திரமாகும். அன்று நடந்த தொழிலாளர் புரட்சியில் இதுபோன்ற விதை மிகவும் வலிமையானதாக இருந்ததால்தான் இன்று தொழிலாளர்களுடைய வாழ்க்கை, தூணாய் உயர்ந்துநிற்கிறது. தொழிலாளி இல்லையேல் இவ்வுலகம் இல்லை என்கிற சூழலில், அவர்கள் இன்று ஓரளவுக்குத் தங்களுடைய உரிமைகளுடன் வாழ்கிறபோதிலும், ஒருகாலத்தில் அவர்களுடைய உழைப்பு உறிஞ்சப்பட்டது; ஊதியம் குறைக்கப்பட்டது;  உடல் காயம்பட்டது. அதிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகவும் அவர்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். அதில், எத்தனையோ இழப்புகள்... சம்பவங்கள் நடந்தேறின. அதன் பயனால்தான் இன்று உலகெங்கிலும் தொழிலாளர் தினம் (மே - 1) சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/world/88032-let-us-know-about-workers-on-may-day.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

Saturday, April 29, 2017

பள்ளிக்கூடம் போகலாம்!

பட்டுச்சட்டை போட்ட பாப்பா...
பள்ளிக்கூடம் போகலாம் வா!

அனைவருடனும் பழகலாம்...
ஆடிப்பாடி மகிழலாம்...
துள்ளிக்குதித்து ஓடலாம்...
துரத்திப்பிடித்து விளையாடலாம்...

சட்டையும் முட்டையும் கிடைக்குமே...
சத்தான உணவும் கிடைக்குமே...
புத்தகமும் நோட்டும் தரப்படுமே...
புதிதாய் அறிவும் வளர்ந்திடுமே...

''தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும்!'' - இரா.செழியன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

''எந்த அரசியல் கட்சிக்கும் நான் சொந்தக்காரன் அல்ல... பொது மனிதன். அரசியலில் இல்லை என்றாலும்கூட, மக்கள் சம்பந்தமான பிரச்னைகளில்தொடர்ந்து போராடுவேன்; அவர்களுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திலும் முன்வந்து செயல்படுவேன். மனிதனை, 'ஓர் அரசியல் விலங்கு' என்று கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் வர்ணித்தார். எனவே, நானும் அத்தகைய மனிதனாவும் மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியாகவும் தொடர்ந்து பாடுபடுவேன். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்''  தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னபோது கூறிய வார்த்தைகள் அவை. அவருடைய பிறந்த தினம் இன்று.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/87831-only-a-tamil-can-save-another-tamil-says-era-sezhiyan.html

நன்றி: 'விகடன்" இணையதளம்

“தகிக்கும் வெப்பம்... அனல் காற்று... இந்தியாவில் எத்தனை பேரை பலி கொண்டிருக்கிறது?!” #VikatanPhotoStory

வெயில் பற்றிய விஷயங்களையும், அதிலிருந்து தப்பிக்கச் சில வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்....
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7314-scorching-summer-suffering-people.album

நன்றி: 'விகடன்' இணையதளம்

Wednesday, April 26, 2017

உ.பி முதல்வர் ஆதித்யநாத்தின் 20 அதிரடி உத்தரவுகள்! #VikatanPhotoStory

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதிரடி உத்தரவுகளையும், அவருடைய படங்களையும் காண இங்கே க்ளிக் செய்யவும்...

http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7289-twenty-orders-of-yogi-adityanath.album

நன்றி: 'விகடன்' இணையதளம்

Sunday, April 23, 2017

''சிவப்புக்கொடி பறந்தால்தான் பணிகள் நடக்கும்!'' - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!

‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி’’ என்ற பட்டுக்கோட்டை ஜெயகாந்தனின் பட்டைத்தீட்டிய வரிகளுக்குச் சொந்தக்காரர் 'பாட்டுக்கோட்டை' என்று அழைக்கப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவருடைய பிறந்த தினம் இன்று. தமிழ்த் திரையுலகில் பாடல் புனைந்தவர்கள் பலர். அதிலும் குறுகிய காலத்திலேயே வளர்ச்சியடைந்தவர்கள் சிலர். இளம்வயதிலேயே தன்னுடைய பாடல்களில் பொதுவுடைமை கருத்துகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர் கல்யாணசுந்தரம்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: 
http://www.vikatan.com/news/miscellaneous/86354-birthday-special-article-of-pattukottai-kalyanasundaram.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

“அம்பேத்கர் வாழ்வும்...வாக்கும்!” #VikatanPhotoCards

அம்பேத்காரின் அரிய படங்களையும், அவருடைய வாக்குகளையும் அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7172-218133-best-quotes-of-ambedkar.album

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் நூதனப் போரட்டங்கள்! #VikatanPhotoStory

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய பல்வேறு வகையான போராட்டங்களின் படங்களில் சிலவற்றைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7205-protest-by-farmers-in-delhi.album

உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

அடால்ப் ஹிட்லரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் உதித்த சிந்தனைகளையும், அவருடைய படங்களையும் காண இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7233-.album

“மாறுங்கள்... இல்லையெனில் காணாமல் போவீர்கள்!

ஏப்ரல் 22-ம் தேதி பூமி தினத்தை முன்னிட்டு அது தொடர்பான பொன்மொழிகளையும் படங்களையும் காண இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7259-220695-let-us-know-about-our-mother-nature-on-earth-day.album

Tuesday, April 11, 2017

''ஆர்.கே.நகர் தேர்தலால் அ.தி.மு.க-வில் இன்னும் மாற்றம் வரும்!''

''ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் மேலும் பல மாற்றங்கள் ஏற்படும்'' என்கின்றனர், அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவானது. ஜெயலலிதா தலைமையின் கீழ் மிகவும் கட்டுக்கோப்புடன் இருந்த அ.தி.மு.க., தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கிறது. அவரது மறைவுக்குப் பிறகு கட்சியையும், ஆட்சியையும் தன்வசம் கொண்டுவர சசிகலா மேற்கொண்ட முயற்சி முழு அளவில் பலனளிக்காமல் போனதே இந்தப் பிளவுக்குக் காரணம் எனலாம். ஓ.பன்னீர்செல்வம், ஜெ-வின் உண்மையான விசுவாசி எனப் பெயரெடுத்ததுடன், அவருக்கு இக்கட்டான சூழ்நிலை உருவாகி (ஜெ. மறைவின்போது) மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றபோது... சசிகலா மற்றும் அவரது மன்னார்குடி உறவுகளின் மிரட்டலுக்கு வளைந்துகொடுக்காமல் தனி அணியாகப் பிரிந்தார்.
பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருப்பது தெரிந்தும் முதல்வர் பதவி ஏற்க முயற்சி மேற்கொண்டார். இதனால், ஓ.பி.எஸ்ஸுக்கும், சசிகலா தரப்புக்கும் மோதல் வெடிக்கத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி இரவு சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதி முன்பு திடீர் தியானம் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு, பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்த சசிகலாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளால், தமிழக அரசியலே தடம்புரண்டது. பதிலுக்கு சசிகலா தரப்பும் பன்னீர்செல்வத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. 
உடைந்த அ.தி.மு.க.!
நாளுக்குநாள் அவர்கள் இருவருக்கும் மோதல் முற்றத் தொடங்கியதையடுத்து, சசிகலா தரப்பில் ஓர் அணியாகவும், ஓ.பி.எஸ் தரப்பில் மற்றோர் அணியாகவும் அ.தி.மு.க இரண்டாகப்  பிரிந்தது. இந்நிலையில்தான், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றனர். இதையடுத்து, சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு பெருக, சசி அணியில் இருந்த சில எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஓ.பி.எஸ் பக்கம் படையெடுக்கத் தொடங்கினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சசிகலா தரப்பு, ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த பலரை பணத்தையும், பதவியையும் காட்டி விலை பேசியது. அதற்கு விலைபோனவர்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.
இந்த நிலையில்தான், ஆர்.கே.நகர்த் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும், 12-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க-வின் இரண்டு அணியினரைத் தவிர, பலம் பொருந்திய தி.மு.க., ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் தீபா, இன்னும் பிற கட்சிகளும் களத்தில் குதித்திருக்கின்றன. அ.தி.மு.க-வின் வெற்றி சின்னமான இரட்டை இலைக்குப் போட்டிபோட்டு...சசி அணியும், ஓ.பி.எஸ் அணியும் தேர்தல் ஆணையத்தை நாடின. ஆனால், விளைவு இரண்டுக்குமே அந்தச் சின்னம் கிடைக்கவில்லை. மாறாக, வெவ்வேறு சின்னங்களும், வெவ்வேறு பெயர்களும் வழங்கப்பட்டன. 
மதுசூதனனுக்கு வெற்றி வாய்ப்பு!
இதனையடுத்து, தீவிர பிரசாரத்தில் அனைத்துக் கட்சியினரும் வாக்குச் சேகரித்து வருகின்றனர். ஆர்.கே.நகர்த் தொகுதியைப் பொறுத்தவரை ஓ.பி.எஸ் அணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மதுசூதனனுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சசி அணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றபோதும், அவர் குடும்பம் சம்பந்தப்பட்டவரே ஆட்சியையும், கட்சியையும் நிர்வகிக்க வேண்டும் என்பதற்காகச் சசிகலாவுடையச் சகோதரி மகனான டி.டி.வி.தினகரனே இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டார். ஏற்கெனவே, அந்த அணி மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தி, இந்தச் செயலால் மேலும் அதிகமானது. இதனால் கலக்கம் அடைந்த தினகரன் ஆதரவாளர்கள், இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் தவிர, இன்னும் சில கட்சியினரும் மக்களைப் பணத்தால் வளைக்க முயற்சி செய்கின்றனர். 
பணப் பட்டுவாடா!
இந்தநேரத்தில்தான் வருமானவரித் துறை, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட 35 இடங்களில் அதிரடியாகச் சோதனை நடத்தியது. அத்துடன், ஆர்.கே.நகர் முழுவதிலும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க கூடுதல் தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால், இவர்களை மிஞ்சும்வகையில் பணப் பட்டுவாடா மிகவும் ஜரூராகவே நடந்துகொண்டிருக்கிறது. அந்தத் தொகுதியில் உள்ள முக்கியப் புள்ளிகள் மூலம் வாக்காளர்களை வேறோர் இடத்துக்கு வரச் சொல்லி பணப் பட்டுவாடா நடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. வாக்காளர்களோ, நேரடியாகப் பணத்தைப் பெறாமல், அந்த மதிப்புக்குரிய வீட்டுஉபயோகப் பொருட்களை கடைகளில் இருந்து எடுத்துச் செல்லும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. 
''அ.தி.மு.க-வில் இன்னும் மாற்றம் வரும்!''
இந்நிலையில்,அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர். ''தற்போது அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்துகிடக்கிறது. இது, இல்லாமல் தீபா அணி வேறு களத்தில் உள்ளது. ஆக, அ.தி.மு.க மூன்று அணிகளாக இத்தேர்தலை எதிர்கொண்டிருப்பதால், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அ.தி.மு.க தொண்டர்கள்.. ஏன் சட்டமன்ற உறுப்பினர்களேகூட, ஓர் அணியைவிட்டு மற்றோர் அணிக்குத் தாவும் வாய்ப்புகளும் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தற்போது, குழப்பமான மனநிலையில் உள்ள அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஒரு தெளிவான விடை காணும் வகையில்தான் இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது. இthiல் வெற்றிபெறும் அணியே மேலும் வலுப்பெறும் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது. தவிர, ஒருவேளை தினகரன் வெற்றிபெறும்பட்சத்தில், அவர்  முதல்வர் பதவி ஏற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அரசு நிர்வாகம் தலைகீழாக மாறும் சூழ்நிலை உருவாகக்கூடும். அவர் வைத்ததே சட்டமாக இருக்கும் என தற்போது பதவியில் உள்ளவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களுக்கு தினகரன் மரியாதை கொடுப்பாரா என்பது கேள்விக்குறியாகி இருப்பதால், ஆர்.கே.நகர்த் தொகுதி தேர்தல் முடிவு, அ.தி.மு.க-வில் இன்னும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்த இடைத்தேர்தல்தான் ஒரு திருப்புமுனையாக இருக்கும்'' என்கின்றனர். 
ஒருதொகுதியின் இடைத்தேர்தலால் திருப்புமுனை ஏற்பட்டால் சரிதான்!
- ஜெ.பிரகாஷ்

"சாலையில் திடீர் பள்ளம்: நடந்தது என்ன?" நடத்துநர் பேட்டி!

சென்னை அண்ணாசாலை ஆயிரம்விளக்கு பகுதியில் திடீரென்று சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் பேருந்தும், காரும் சிக்கிக் கொண்டதன் பின்னணியில் நடந்தது என்ன என்பதை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/85892-reason-behind-cave-in-on-chennais-anna-salai.html

நன்றி: விகடன் இணையதளம்

காந்திக்கும் கஸ்தூரிக்கும் இடையிலான காதலின் மின்னல் தருணங்கள்! - கஸ்தூரிபாய் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

து, ஓர் ஏழு வயது சிறுமியின் வீடு.  அந்த வீட்டில் உறவினர்களும், நண்பர்களும் கூடியிருந்தனர். அவர்களுடன், ஜோசியரும் புரோகிதரும்கூட. முக்கியமாய் பக்கத்துவீட்டு மோகன்தாஸின் அப்பா. இதனால் அங்கு, மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ''எப்போதும், நம் தந்தையைக் காண வியாபார நண்பர்கள்தானே வருவார்கள்; ஆனால், இந்த முறை இவர்கள் வந்திருப்பது எதற்கென்று தெரியவில்லையே? அது என்னவோ, நமக்கேன் வம்பு... பெரியவர்கள் விஷயம்'' என்று நினைத்தபடியே தோட்டத்துக்குள் ஓடினாள், அந்தச் சிறுமி. அவர், வேறு யாருமல்ல... மகாத்மா காந்தியின் (மோகன்தாஸ்) மனைவி கஸ்தூரிபாய். அவருடைய பிறந்த தினம் இன்று. 

http://www.vikatan.com/news/miscellaneous/86058-this-is-what-kasturba-gandhi-said-about-gandhi-birthday-special-article.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

“வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது யார் பொறுப்பு?” - தலாய் லாமா பதில்

“தலாய் லாமா என்பதற்குப் பலரும் பல்வேறு அர்த்தங்களை வழங்குகிறார்கள். சிலருக்கு நான் புத்தரின் அவதாரம்; சிலருக்கு நான் இறைவன், அரசன். 1950-களில் சீன அரசு எனக்கான மரியாதையை அளித்து சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவராக்கியது. ஆனால், 1959-ல் திபெத்தின் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து நான் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தபோது அதே சீனா என்னைப் புரட்சிக்காரன் என்று அழைத்தது'' - இப்படித் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த மனிதர் வேறு யாருமல்ல... புத்த மதத் தலைவர் தலாய் லாமா.

இந்தக் கட்டுரையை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/india/85321-people-should-dedicate-themselves-for-peace-dalai-lama.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

Friday, March 31, 2017

தீபா முதல் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை வரை... தீபாவின் தடாலடிகள்! #VikatanPhotostory

தீபா முதல் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை வரை... தீபாவின் தடாலடிகள்! #VikatanPhotostory


இந்தப் புகைப்படத் தொகுப்பைக் க்ளிக் செய்ய... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7044-the-activities-of-deepa-in-politics.album

நன்றி: 'விகடன்' இணையதளம்

விவசாயிகள் பிரச்னை குறித்து பிரபலங்கள் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? #VikatanPhotoStory

விவசாயிகள் பிரச்னை குறித்து பிரபலங்கள் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? #VikatanPhotoStory

இந்தப் புகைப்படத் தொகுப்பைக் க்ளிக் செய்ய.... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7053-what-our-celebrities-have-to-say-about-farmers-issue.album

நன்றி: 'விகடன்' இணையதளம்

ஆர்.கே. நகர் மக்களின் முக்கியப் பிரச்னைகள் இவைகள்தான்!

டைத்தேர்தலால், தற்போது சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதி களைகட்டி வருகிறது. இதனால், பிரதானக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் பிரசாரத்தில் தீவிரம் காட்டிவருகின்றனர். அதில் சிலர், நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் அள்ளிவீசியிருக்கின்றனர். இந்த நிலையில், அந்தத் தொகுதி மக்கள், ''பொதுவாக எங்கள் தொகுதியில் காலங்காலமாக இருக்கும் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்த்துவைத்தாலே... ஆர்.கே.நகர்த் தொகுதி முன்மாதிரியாக மாறிவிடும். ஆனால், அந்தப் பிரச்னைகளை இந்தத் தொகுதியிலிருந்து வென்ற எந்த எம்.எல்.ஏ-க்களும் இதுவரை செய்யவில்லை'' என்று சொல்லும் அவர்கள், கீழ்க்கண்ட அந்தப் பிரச்னைகளைப் பட்டியலிடுகின்றனர். 

மேலும் இந்தக் கட்டுரையின்  தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/84994-these-are-the-major-issues-faced-by-rk-nagar-people.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

எம்.ஜி.ஆர் சமாதிக்கு வைகோ சென்றது ஏன்?

ந்தாரை வாழவைக்கும் அன்னையாக விளங்கும் சென்னையில், அதன் செல்லக் குழந்தையாக இருந்து அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் மெரினா கடற்கரைக்கு தனிப்பங்கு உண்டு. இது, 'சென்னைப் பெருநகரத்தின் நுரையீரல்' என அழைக்கப்படுவதுடன், நகரின் முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது. உலகின் இரண்டாவது மிக நீளமானக் கடற்கரையைக் கொண்டு திகழும் மெரினா பீச், சென்னையின் பொழுதுபோக்கு அம்சமாகவும், சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இதற்குக் காரணம், மெரினா கடற்கரையில்தான் தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளும், பல தலைவர்களின் சிலைகளும் அமைந்துள்ளன. இவைதவிர மாநகராட்சி சார்பில் சிறுவர்களுக்கான நீச்சல் குளம் மற்றும் கடற்கரைச் சாலையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆகியனவும் இடம்பெற்று கூடுதல் சிறப்புச் சேர்க்கின்றன.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/85072-this-is-why-vaiko-went-to-mgr-memorial.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

Tuesday, March 28, 2017

இப்படிதான் இந்தியாவில் ஊடுருவியது சீமைகருவேலமரம்! #VikatanPhotoStory

சீமைக் கருவேல மரங்கள் பற்றிய வரலாற்றையும் அதன் படங்களையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/6983-.album

நன்றி: 'விகடன்' இணையதளம்


“தேர்தலில் வெற்றிபெற்றால், மறுநாளே ராஜினாமா!” இப்படிச் சொன்னவருக்கு இன்று பிறந்தநாள்

வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக இருக்கக் கூடிய கல்வியை, ஒரு கடமை உணர்வோடு கற்க வேண்டும்; கல்லூரியில் பயிலும் காலத்தில் களியாட்டங்களில் நாட்டங்கொண்டு சக்திகளை வீணாக்காமல், அதை நன்முறையில் வளர்த்துக்கொள்ள வேண்டும்; நீங்கள் சமுதாயத்தின் வேலையாட்கள் என்பதை நினைவில்கொண்டு நல்ல பண்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பல உண்மைகளைக் கற்றுக்கொள்ள முடியும்'' என்கிற கல்விக்கான மகத்துவத்தை, ஒரு கல்லூரி நிகழ்வின்போது மாணவர்களிடம் வலியுறுத்தியவர் ஜி.டி.நாயுடு என்கிற ஜி.துரைசாமி. அவருடைய பிறந்த தினம் இன்று.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/84379-i-will-resign-the-next-day-after-winning-the-elections-story-remembrance-on-gdnaidus-birth-anniversary.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

20 புகைப்படங்களில் ஆர்.கே.நகர் வரலாறு! #VikatanPhotoStory

ஆர்.கே.நகர் வரலாறு தொடர்பான புகைப்படங்களைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7036-history-of-rk-nagar-constituency-in-20-images.album

நன்றி 'விகடன்' இணையதளம்

Monday, March 20, 2017

''இனிமேல் அவரைப் பேச விடக்கூடாது!'' ராதாரவியைக் கண்டிக்கும் மாற்றுத்திறனாளி அமைப்புகள்

தி.மு.க தலைவர் கருணாநிதியால் பெயர்சூட்டப்பெற்றவர்கள்  ராதாரவிக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள். அவர்களின் மனம்குன்றும் வகையில் பேசிய நடிகர் ராதாரவி, பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளதுடன், அவருக்கு எதிராகப் போராட்டமும் நடத்தவிருக்கிறது. 
ராதாரவி. இவர் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசு. அ.தி.மு.க-வில் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த ராதாரவி கடந்த சில நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க-வில் இருந்து விலகி, தி.மு.க-வில் இணைந்தார். இவர் பேச்சில் எப்போதும் நகைச்சுவை இருப்பதோடு... மனம் நெருடும் கருத்துகளும் இருக்கும். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, பா.ம.க நிறுவனர் ராமதாஸையும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவையும் மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டு... கிண்டலடித்துப் பேசியிருந்தார். இந்தப் பேச்சைக் கூட்டத்தில் இருந்த அனைவரும் கேட்டு ரசித்தனர். ஆனால், அந்தப் பேச்சுத்தான் இப்போது ராதாரவிக்கு பெரும் தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறது. 

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/82723-radharavi-faces-the-heat-as-he-mocked-differently-abled.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

மேடையில் சரிந்த தொண்டர்... கண்டுகொள்ளாத தலைவர்... கொதித்த மக்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமடைந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் அந்தக் கட்சித் தொண்டர்களில் பலர் உயிரைவிட்டனர். அவர்களுடைய குடும்பங்களுக்கு, தற்போது அ.தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வில் மேடையில் சரிந்தார் ஒரு தொண்டர்... அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தார், அந்தக் கட்சியின் தலைவர். இதைப் பார்த்த மக்களோ கொதித்தெழுந்துவிட்டனர். 
'இமயத்துடன்' என்ற டி.எம்.எஸ் பற்றிய தொடரை இயக்கியவர், இயக்குநர் டி.விஜயராஜ். இவர், ஜெயலலிதாவின் நினைவலைகள் பற்றி ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83303-party-cadre-collapsed-at-aiadmk-welfare-distribution-meeting-party-chief-doesnt-bother.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

”நாம் ஏமாறுவதற்கு நாமே துணைநிற்கிறோம்” நுகர்வோர் ஏமாறுவது இப்படிதான்!

மாறுபவர்கள் இருக்கிறவரை உலகம் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கும். இயந்திரமயமான இன்றைய உலகில்... நாம் ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறோம். அது, நம்முடைய அறியாமையால் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும்... மறுபுறம், கடைகளில் பொருள்கள் வாங்கும்போது, பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கும்போது, திரையரங்குகள் மற்றும் சில இடங்களில் பாதிக்கப்படும்போது எனப் பல சந்தர்ப்பங்களில் தெரிந்தே ஏமாறுகிறோம். இதற்கு, விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இல்லாததே காரணம். இப்படி, இந்த உலகத்தில் ஏமாற்றப்படும் ஒவ்வொரு மனிதரும் நுகர்வோரே. அவர்கள் அனைவரும் தமது உரிமையைக் காத்திடவும், ஏமாற்றத்தைத் தவிர்த்திடவும் எப்போதும் விழிப்புடன் இருத்தல் வேண்டும். இதற்காகத்தான் ஆண்டுதோறும் மார்ச் 15-ம் நாள் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் புரட்சிகரமான அறிவிப்புக்குப் பிறகு, சுமார் 20 ஆண்டுகள் கழித்து அதாவது, 1983-ம் ஆண்டு மார்ச் 15-ம் நாள் உலகம் முழுவதும் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83720-world-consumer-rights-day-special-article.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

பன்னீர்செல்வம் அணியிலிருந்து தீபா விலகியிருக்கக் காரணம் என்ன?

அ.தி.மு.க-விலிருந்து வெளியேறிய ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தவர் தீபா. தற்போது அவர்களிடமிருந்து விலகியிருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று விடை தேடி அவருடைய ஆதரவாளர்களை நாடினோம்... முழுமையான பதில் கிடைத்தது... அதற்குமுன் தீபா பற்றிய சின்ன ஃப்ளாஷ்பேக்....
'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' !
ஜெ.தீபா. இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் (அண்ணன் மகள்) ரத்த சொந்தம். மாதவன் என்பவரை,  தீபா திருமணம் செய்துகொண்டு சென்னை தி.நகரில் வசித்துவருகிறார். ஜெ. உடல்நலமின்றி அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது... அவரைப் பார்க்கச் சென்ற தீபாவை, மன்னார்குடி கும்பல் இடையிலேயே மடக்கித் திருப்பியனுப்பியது. ஜெ-வின் இறப்புக்குப் பிறகு அம்மாவின் உண்மையான விசுவாசிகளும், அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களும் தீபாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். இதனால் தினந்தினம் அவர் வீட்டுமுன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி, அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். பல நாள்கள் காலம் தாழ்த்திவந்த தீபா, நீண்ட யோசனைக்குப் பிறகு... அரசியலில் குதிக்க முடிவெடுத்தார். அதன் காரணமாக, அவருடைய அத்தையின் (ஜெ-வின்) பிறந்தநாளின்போது ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார். 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என அதற்குப் பெயரும்வைத்தார். 
மெலும் இந்தக்  கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83887-why-does-not-join-deepa-join-ops-team-.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

இந்தப் பரிசுக்காக காத்திருந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?..#worldtoiletday. தொகுப்பு- ஜெ.பிரகாஷ்

கழிப்பறை பற்றிய செய்திகளையும், படங்களையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்: http://www.vikatan.com/news/album.php?&a_id=6149&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

கார்ல்மார்க்ஸ் 20 - நினைவு நாள் சிறப்புப் பகிர்வு! #VikatanPhotoStory

கார்ல் மார்க்ஸ் பற்றிய படங்களையும், அவர் சொன்ன பொன்மொழிகளையும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/6905-211432-twenty-inspirational-quotes-of-karl-marx.album

நன்றி: 'விகடன்' இணையதளம்

ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டது எப்படி?

“சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, போராடி வீரனாகச் சாவதேமேல்'' என இந்தச் சாட்டையடி வார்த்தைக்குச் சத்ய பிரமாணம் எடுத்தவர் ஜூலியஸ் சீசர்.  இந்தப் பெயர் இரண்டாயிரம் ஆண்டுகள் அரசு அதிகாரத்துக்கு அடையாளமாக நீடித்த ஒன்று. இவர் பெயரும், இவரது தந்தையின் பெயரும் ஒன்றே.  கேயஸ் ஜூலியஸ் சீசர் என்பதே அது. அவர் கொல்லப்பட்ட தினம் இன்று.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83681-assassination-of-julius-caesar.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

''காதல் என்றால் ஜென்னி...'' கார்ல் மார்க்ஸ் நினைவுதின சிறப்புப் பகிர்வு

ண்பருடன் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த அவர், வழியில்... சாலையோரத்தில் ஒரு பெண்ணை அடித்துக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தபிறகு,பேருந்திலிருந்து கீழே இறங்கி... பெண்ணை அடித்தவனை அடிக்கப்போனார். அதற்குள், அந்தப் பெண்ணோ... ''இது எங்கள் குடும்ப விவகாரம். இதில், தலையிட நீ யார்'' என்றார். வேடிக்கை பார்த்த கூட்டமும் அவருக்கு எதிராகத் திரும்பியது. பின், ஒருவழியாகக் கூட்டத்தைச் சமாளித்து அங்கிருந்து அழைத்துவரப்பட்டார், அவர். இப்படி அன்றே, மாற்றத்துக்கான விதையை மண்ணில் விதைக்க முற்பட்ட அந்த மாமேதை பொதுவுடைமையின் தந்தை கார்ல் மார்க்ஸ். அவருடைய நினைவு தினம் இன்று.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83581-karl-marx-memorial-day-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு

''நீ மிகவும் மோசமாகத் தேர்வு எழுதியிருக்கிறாய்; கணிதம், பெளதிகம் இரண்டைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை; மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை; இந்தநிலையில், நீ இங்குச் சேர விரும்புகிறாய். அது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். நீ மறுபடியும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று படித்துத் தேர்ச்சிபெற வேண்டும். அப்படித் தேர்ச்சிபெற்று வந்தால், நான் உன்னைச் சேர்த்துக்கொள்கிறேன்'' - இது, தொழில்நுணுக்கக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தோற்ற ஒருவரைப் பார்த்து... ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத் தலைவர் சொன்னது. பின்னாளில், அந்தத் தேர்வில் தோற்ற மனிதர்தான், அகிலம் வியந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவருடைய பிறந்த தினம் இன்று.

மெலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83567-albert-einstein-birthday-special-article.html?artfrm=editor_choice

நன்றி: 'விகடன்' இணையதளம்

பார்பி கேர்ள் உருவான கதை தெரியுமா? #BarbieDolls

குழந்தைகளிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்று பொம்மை. அவர்கள் கேட்ட பொம்மையை நாம் வாங்கிக் கொடுத்துவிட்டோம் என்றால், அதையே அவர்கள் உலகம் எனக் கருதி வாழத் தொடங்கிவிடுவர். பொம்மைகளை, குழந்தைகள் மட்டுமல்ல... இன்றைய இளம்பெண்களும் அதிகமாகவே விரும்புகின்றனர். ஆக, பலரும் விரும்பும்வகையில்  பலவிதங்களில் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதில் ஒன்றுதான் பார்பி பொம்மை. அது, பிறந்த தினம் இன்று. 
ரூத் ஹேன்ட்லர். இவர், தன்னுடைய  மகள் காகிதப் பொம்மைகளுக்குப் பெரியவர்களின் பெயர்வைத்து விளையாடுவதைக் கண்டு ரசிப்பார். குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் அந்தக் காலத்தில் மிகவும் சிறியதாக இருப்பதைக் கவனத்தில்கொண்ட ஹேன்ட்லர், ''வளர்ந்து பருவமடைந்த ஓர் உடலைப் பொம்மையாகச் செய்ய வேண்டும்'' என்று தன் கணவர் எலியட்டிடம் சொன்னார்.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83088-history-of-barbie-dolls-barbiedolls.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

கங்கை அமரனை ஆர்.கே. நகரில் களமிறக்கியது எதற்கு?

''நீங்கள், பி.ஜே.பி-யில் இருந்துகொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கலாமா'' என்று அப்போது, நம் 'விகடன்' சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை, மக்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்னை. பொது வாழ்க்கை, மக்கள் சேவையில் வருபவர்களுக்கு ஏதேனும் உண்மை சார்ந்த குற்றச்சாட்டுகள் இருப்பினும், அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, ஓர் அரசியல்வாதியான என்னுடைய கடமையாகும். அவ்வாறு குற்றச்சாட்டு வைப்பதால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிரியாகவும் கருதக்கூடாது. பி.ஜே.பி-யைச் சேர்ந்த நான், என்றும் என்னுடைய தேசத்துக்கும், மக்களுக்கும் நேர்மையான மக்கள் தொண்டாற்றுவதிலேயே கடமைகொண்டு இருக்கிறேன்'' என்றார், இசையமைப்பாளர் கங்கை அமரன். 
அந்த கங்கை அமரன்தான், தற்போது களைகட்டத் தொடங்கியிருக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் தொகுதியின் பி.ஜே.பி வேட்பாளர். அ.தி.மு.க-வின் கோட்டையான இந்தத் தொகுதியில், பலமுனைப் போட்டி நிலவுகிறது. ஒருசில கட்சிகளைத் தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் தங்களுடைய வேட்பாளர்களைக் களமிறக்கிவிட்டன. சுயேட்சை வேட்பாளர்களும் களம் கண்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது பி.ஜே.பி-யின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கங்கை அமரன், ஆர்.கே.நகர் வேட்பாளராகத் தேர்வானது எப்படி என தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83947-why-bjps-gangai-amaran-is-contesting-in-rk-nagar.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: 'விகடன்' இணையதளம்

டி.டி.வி.தினகரன் திடீரெனக் களமிறங்கியது இதற்குத்தான்...!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செய்தியே தற்போது அனைவருடைய உதடுகளிலும் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் நின்ற இந்தத் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பி.ஜே.பி எனப் பலமுனைப் போட்டிகள் நிலவுவதுடன்... ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் இந்தத் தொகுதியில் வேட்பாளராகக் களத்தில் குதிக்கத் திட்டமிட்டுள்ளார். இதுதவிர, அ.தி.மு.க-வில் இருந்து விலகிச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் களத்தில் குதிக்கத் தயாராய் இருக்கின்றனர். இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க-வின் வேட்பாளராக அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் டி.டி.வி.தினகரன் களம் காண்கிறார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். தே.மு.தி.க சார்பில் மதிவாணன் நிறுத்தப்பட்டுள்ளார். தீபாவையும் சேர்த்தால், தற்போது நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இவர்கள் அனைவரையும் எதிர்த்து ஜெயிக்கப்போகிறவர் அந்தத் தொகுதி மக்களின் ஆதரவாளராகவும், அதேசமயத்தில் அதிர்ஷ்டசாலியாகவும் இருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் யார் வெற்றிபெறுகிறார் என்பதை, தேர்தல் நாள் முடிவன்றுதான் தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலையில் டி.டி.வி.தினகரன், ''இந்தத் தொகுதியில் வேட்பாளராய் களம் காண்பதற்கு என்ன காரணம், அந்தக் கட்சி சார்பில் வேட்பாளராய் நிறுத்தப்படுவதற்கு சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தபோது... அவரே இறங்கியது ஏன்'' போன்ற தகவல்களை அ.தி.மு.க-வினர் அடுக்கினார்கள்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83781-this-is-why-t-t-v-dinakaran-contesting-in-rk-nagar.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் ஒரு பார்வை!

றைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து, அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி, ஆர்.கே. நகர். அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதால், தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கக் காத்திருக்கிறது. இதனால், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா போன்ற கட்சிகள் இதில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன. ஆனாலும், பிற கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரசாரம் செய்துவருகின்றன. இந்த நிலையில், அந்தத் தொகுதியில் தற்போது களம் காண இருக்கும் வேட்பாளர்கள் பற்றிய  ஒரு சிறுதொகுப்பு இதோ...

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83866-know-about-the-contestants-of-rk-nagar.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

சீமைக் கருவேலமரத்தின் கதையும்... ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் நக்கலும்...!

''எங்களை அழிப்பதற்கு முடிவெடுத்துவிட்டீர்கள்; அதில், எங்களுக்கு மிகவும் சந்தோஷம். 'என்னால்தான் விவசாயம் பாதிக்கப்படுகிறது; நிலத்தடி நீரும் உறிஞ்சப்படுகிறது. ஆகவே, எங்களை அகற்ற வேண்டும்' என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.  இதையடுத்து, 13 மாவட்டங்களில் இருக்கும் எங்களை அகற்ற, இல்லையில்லை அடியோடு அழிக்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. அதற்கான பணிகளும் தீவிரமாய் அரங்கேறிவருகின்றன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் அகற்றப்பட்டு வருகிறோம். எங்களை முழுமையாக முடிப்பதற்குள், எங்கள் கதையைத் தன் வரலாறாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறோம். சீமைக் கருவேல மரம் (சில இடங்களில் காட்டுக்கருவை) என்பதுதான் எங்களுடையப் பெயர் என்பதை முதலில் உங்களுக்கு நினைவுபடுத்திக்கொள்கிறோம்.

மேலும் இதுகுறித்த கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/84049-story-of-prosopis-juliflora-and-evks-elangovans-satirical-comment.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்.... ஒரு பூசாரி முதல்வர் ஆன கதை!

ந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் முதல்வராய்ப் பொறுப்பேற்க இருக்கும் யோகி ஆதித்யநாத், இதற்குமுன் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கிளப்பியவர். இதுதொடர்பாக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசம். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். இங்கு சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி., பெரும்பான்மையாக வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே மாபெரும் வெற்றிபெற்ற பி.ஜே.பி., புதிய முதல்வரைத் தேர்வுசெய்ய ஒருமனதாக முடிவு செய்தது. இதில், அந்த மாநிலத்தில் உள்ள கோரக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினரான யோகி ஆதித்யநாத் புதிய முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார். உத்தரப்பிரதேச புதிய முதல்வராகப் பதவியேற்க இருக்கும் நேரத்தில், அவருக்கு வாழ்த்துகளும் பரிசுகளும் குவிந்துகொண்டிருக்க... மற்றொரு புறம், அவர் முன்னர் ஏற்படுத்திய சர்ச்சைகளும்... வழக்குகளும் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க; http://www.vikatan.com/news/india/84022-travel-of-uttar-pradesh-chief-minister-yogi-adityanath-from-temple-priest-to-chief-minister.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

Saturday, March 11, 2017

“ஊழியர்களின் அலட்சியம்... தவிக்கும் வாசகர்கள்...!” - தேவநேயப் பாவாணர் நூலகத்தின் அவலம்

"என் மனதுக்குப் பேரின்பத்தை அள்ளியள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகம்" என்று சொன்ன ஆபிரகாம் லிங்கனும், "நூலகம் இல்லாத ஊரை நான் ஓர் ஊராக மதிப்பதே இல்லை" என்றுரைத்த  லெனினும், "ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை" என்று சொன்ன சிசரோவும் மாபெரும் சிந்தனையாளர்கள். அவர்களுடைய அறிவுப்பசியை, நூலகங்களே தீர்த்திருக்கின்றன. அவர்கள் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ மாமேதைகளை உருவாக்கியதும், உருவாக்கிக்கொண்டிருப்பதும் நூலகங்கள்தான். 
அறிவுச் செல்வத்தின் சேமிப்புக் கிடங்காக விளங்கும் நூலகம், எல்லோருக்கும் எக்காலத்தையும் இணைத்துவைக்கும் சிந்தனைப் பாலமாக இருக்கிறது. ஆனால், ''அப்படியா இருக்கின்றன இங்குள்ள நூலகங்கள்'' எனக் கேள்வி எழுப்புகிறார் வாசகர் ஒருவர்.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/82864-concern-over-poor-condition-of--devaneya-pavanar-library.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

ஆர்.கே.நகர் சென்டிமென்ட்டும்... மக்கள் எதிர்பார்ப்பும்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக, தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, காலியாகும் சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தொகுதியில், ஆறு மாதங்களுக்குள்  இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (9-3-17) தேர்தல் ஆணையம், ''வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்'' என்று அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 16-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15-ம் தேதியும் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83182-these-are-the-expectations-of-rk-nagar-people.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

மேடையில் சரிந்த தொண்டர்... கண்டுகொள்ளாத தலைவர்... கொதித்த மக்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமடைந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் அந்தக் கட்சித் தொண்டர்களில் பலர் உயிரைவிட்டனர். அவர்களுடைய குடும்பங்களுக்கு, தற்போது அ.தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வில் மேடையில் சரிந்தார் ஒரு தொண்டர்... அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தார், அந்தக் கட்சியின் தலைவர். இதைப் பார்த்த மக்களோ கொதித்தெழுந்துவிட்டனர். 
'இமயத்துடன்' என்ற டி.எம்.எஸ் பற்றிய தொடரை இயக்கியவர், இயக்குநர் டி.விஜயராஜ். இவர், ஜெயலலிதாவின் நினைவலைகள் பற்றி ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் ப்டிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83303-party-cadre-collapsed-at-aiadmk-welfare-distribution-meeting-party-chief-doesnt-bother.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

Sunday, March 5, 2017

சரோஜினி தேவி சிறைவாசம் அனுபவித்தது இதற்குத்தான்! - நினைவு தின சிறப்புப் பகிர்வு

''என் வாழ்க்கையில் நான் இந்தப் பரந்த, தேசிய சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்க முயல்கிறேன். நான் வங்காளத்தில் பிறந்தவள்; ஆனால், சென்னைக்குச் சொந்தமானவள். ஒரு முஸ்லிம் நகரத்தில் வளர்ந்தேன்; அங்கேயே மணம் புரிந்து மணவாழ்க்கையை நடத்தினேன். எனவே, நான் வங்காளியும் அல்ல; சென்னைக்காரியும் அல்ல; ஹைதராபாத்காரியும் அல்ல. நான் ஓர் இந்தியப் பெண்.'' - இந்த எழுச்சிமிகு வரிகளைத் தன் எண்ணத்தில்கொண்டு, தேசிய உணர்வுடன் வாழ்ந்து மறைந்தவர் கவிக்குயில் சரோஜினி தேவி. அவருடைய நினைவு தினம் இன்று.

மேலும் இந்தக்  கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/82416-sarojini-devi-memorial-day-special-article.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

''இனிமேல் அவரைப் பேச விடக்கூடாது!'' ராதாரவியைக் கண்டிக்கும் மாற்றுத்திறனாளி அமைப்புகள்

தி.மு.க தலைவர் கருணாநிதியால் பெயர்சூட்டப்பெற்றவர்கள்  ராதாரவிக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள். அவர்களின் மனம்குன்றும் வகையில் பேசிய நடிகர் ராதாரவி, பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளதுடன், அவருக்கு எதிராகப் போராட்டமும் நடத்தவிருக்கிறது. 
ராதாரவி. இவர் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசு. அ.தி.மு.க-வில் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த ராதாரவி கடந்த சில நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க-வில் இருந்து விலகி, தி.மு.க-வில் இணைந்தார். இவர் பேச்சில் எப்போதும் நகைச்சுவை இருப்பதோடு... மனம் நெருடும் கருத்துகளும் இருக்கும். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, பா.ம.க நிறுவனர் ராமதாஸையும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவையும் மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டு... கிண்டலடித்துப் பேசியிருந்தார். இந்தப் பேச்சைக் கூட்டத்தில் இருந்த அனைவரும் கேட்டு ரசித்தனர். ஆனால், அந்தப் பேச்சுத்தான் இப்போது ராதாரவிக்கு பெரும் தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறது.

மேலும் இதுகுறித்த கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/82723-radharavi-faces-the-heat-as-he-mocked-differently-abled.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

Tuesday, February 28, 2017

அமளிதுமளி சட்டமன்றம்... 1988-லும் 2017-லும் என்ன நடந்தது?

மிழகத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று கூடியிருந்த சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். சட்டசபையில் இன்று நடந்த களேபரம்போல் அன்று நடந்தது என்ன? அங்கு, அன்றும் இன்றும் நடந்த சம்பவங்கள் இதோ... 
சட்டசபை அன்று...
இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/coverstory/81255-similarities-between-1988-and-2017-trust-vote.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: விகடன் இணையதளம்

Monday, February 27, 2017

'தன் மனைவியை இங்கேதான் கடைசியாகச் சந்தித்தார்...' - அபுல் கலாம் ஆசாத் நினைவு தின சிறப்புப் பகிர்வு!

''மொகலாய மன்னர்களின் சாம்ராஜ்யத்தில் என் மூதாதையர் உயர்ந்த பீடத்தை அலங்கரித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், இன்று எனக்கு மட்டும் தேசபக்தி இருக்காதா என்ன... இருக்கக்கூடாதா என்ன? இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில்தான் நான் பிறந்தேன். ஆனால், இது என் ஜென்ம பூமி. என்னை நீங்கள் ஓய்ந்திருக்கச் சொல்வது, 'புயலே ஓய்ந்திரு; ஆர்ப்பரிக்கும் கடலே தலை சாய்ந்திரு' என்று கூறுவதுபோல் இருக்கிறது'' என அன்றைய வங்க விடுதலை இயக்கத்தின் புரட்சியாளர் ஷியாம் சுந்தர் சக்கரவர்த்தியிடம் சொன்னார், அபுல் கலாம் ஆசாத். அவருடைய நினைவு தினம் இன்று

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/81573-abul-kalam-azad-birthday-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: விகடன் இணையதளம்

மஞ்சள் அட்டை திருமணப் பத்திரிகை முதல் - கிரெடிட் கார்ட் பத்திரிகை வரை! #WeddingCards

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’ என்பது உண்மைதான். ஆனாலும் வெவ்வேறு இடங்களிலும், இல்லங்களிலும் அந்தத் திருமண முறைகள் மாறுபடுகின்றன என்பதும் உண்மை. இது ஒருபுறமிருக்க, இன்றைய நவீன உலகில் திருமண நிகழ்வுகள் மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேறிவருவது குறிப்பிடத்தக்கது. ஆகாயத்தில் பறந்துகொண்டும், கடலுக்கு அடியில் பயணம் செய்தபடியும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளைச் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. திருமண நிகழ்வுகளில்கூட பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. அன்று சாதாரணமாக நடைபெற்ற திருமணங்கள், இன்று மிகவும் ஆடம்பரமாக நடக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. திருமணங்கள் இவ்வாறு பல்வேறு விதங்களிலும், ஆடம்பரமாகவும் நடைபெறும்போது, அதற்கு அச்சாணியாக இருக்கும் திருமணப் பத்திரிகைகளில் மட்டும் மாற்றம் வராமல் இருக்குமா என்ன?

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/79374-varieties-of-wedding-cards--weddingcards.html

நன்றி: விகடன் இணையதளம்

சிறுகதையின் இலக்கணம் சுஜாதா! - நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

''தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டுகொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது'' - இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர், எழுத்தாளர் சுஜாதா. அவருடைய நினைவு தினம் இன்று. 
இலக்கியங்களுக்குள் கோலோச்சியிருந்த எழுத்துகளை, தன் கற்பனையாலும் சிந்தனையாலும் நவீன உலகுக்குள் கொண்டுவந்து, இளைஞர்களுக்கு நளினம் பாய்ச்சியவர், சுஜாதா. அறுபதுகளில் ஆரம்பித்த அவருடைய எழுத்துப் பயணம், அவர் இறக்கும்வரை தொடர்ந்தது. கி.ரங்கராஜன் என்னும் இயற்பெயர்கொண்ட சுஜாதா, தன் மனைவியின் பெயரையே புனைபெயராக்கிக்கொண்டார். யாரும் பயன்படுத்தாத ஒரு புதிய மொழிநடையையும் கருப்பொருள்கள்கொண்டு எழுதுவதையும் அவர் உருவாக்கினார். அறிவியலுக்கும், இலக்கியத்துக்கும் புதிய பங்களிப்பைத் தந்தார். அவருடைய எழுத்து, தமிழுக்கு ஒரு பாய்ச்சல் என்றால் மிகையாகாது.

மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/82123-tribute-to-sujatha-rangarajan-whats-special-about-his-novels.html
நன்றி : விகடன் இணையதளம்