Thursday, October 8, 2015

அம்மா


மூக்குச்சளியை இழுப்பியபடியும்
மூத்திரத்தில் நனைந்தபடியும்
மலத்தில் புரண்டபடியும்
மண்ணைத் தின்னப்படியும்
என எப்படி இருந்தாலும்
தன் குழந்தையை
எடுத்துக் கொஞ்சுவாள்...
அம்மா!

- எடையூர் ஜெ.பிரகாஷ்

முரண்


 ஆயிரம் முறை 
சிரித்துக்கொண்டே
பாலூட்டிய அன்னைக்கு
ஒரே  ஒருமுறை
அழுதுகொண்டே 
பால் ஊற்றினான்...
மகன்!
- எடையூர் ஜெ.பிரகாஷ்