Wednesday, October 5, 2016

ஏன் காமராஜர் வழியை பின்பற்ற வேண்டும்...?' காமராஜர் நினைவு தினம் சிறப்பு பகிர்வு

‘‘சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்’’ என்றவர் பெருந்தலைவர் காமராஜர். அதற்குத் தகுந்தாற்போல் வாழ்ந்துகாட்டியவர் அவர். அவருடைய நினைவு தினம் இன்று. இந்திய நாட்டில் பெரும் தேசியத் தலைவர்களாகத் திகழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர், பட்டம் பெற்றவர்களாவும் வழக்குரைஞர்களாகவும் இருந்து அரசியலில் குதித்தவர்கள். ஆனால், காமராஜர் மட்டும்தான் சாதாரண கல்வியறிவு பெற்றிருந்தும் பாரதத்தின் பெருந்தலைவர்களில் ஒருவராக உயர்ந்து மக்களுக்கு வழிகாட்டியவர். 

எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் !
‘‘அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது அது மக்களுக்குக் கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது. ஆகவே, வீண் சண்டைகளை, சர்ச்சைகளை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்’’ என்றார் காமராஜர். ஆனால், எந்த அரசியல்வாதிகள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் அவர். 1953-54-ம் ஆண்டில் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நேரத்தில் முதல்வர் பதவிக்கு சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டார். முதல்வர் பதவிக்கு சுப்பிரமணியம் பெயரை பக்தவத்சலமே முன்மொழிந்தார். தேர்தலில் காமராஜர் வெற்றிபெற்றார்.

மேலும் இந்தக் கட்டுரையத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69058-why-should-we-follow-kamarajar-memorial-day-special-article.art
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment