Monday, October 17, 2016

சீசரின் நண்பன் கண்ணதாசன்...! - நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

‘‘யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாறநினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்’’ என்றவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய நினைவு தினம் இன்று.
‘‘ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி!’’
மருது பாண்டியர்கள் நீதி தவறாது ஆட்சி செய்த சிவகங்கைச் சீமையின் சிறுகூடல்பட்டியில் வசித்த சாத்தப்பன் - விசாலாட்சி என்ற தம்பதியருக்கு எட்டாவது மகனாய் பிறந்தவர் முத்து. அந்த முத்துதான் பின்னாளில் கண்ணதாசன் என்ற முத்தாய் ஜொலித்தார். பள்ளிக்கூடத்துக்கு மூன்று ரூபாய் கட்டமுடியாத நிலையில், பலமுறை வெளியே அனுப்பப்பட்டார். இறுதியில் ஏட்டுக் கல்வியை எட்டாம் வகுப்போடு நிறுத்திக்கொண்ட கண்ணதாசன், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் தலைமை ஆசிரியராய் இருந்த பள்ளியில் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி வீட்டுக்குச் சென்றுவிடுவார். ஏட்டுக்கல்விக்குத்தான் விடை கொடுத்தாரே தவிர, எழுதுவதற்கு விடை கொடுக்கவில்லை. தன் வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த பாப்பாத்தி ஊருணிக் கரையில் அமர்ந்து எதையாவது எழுதிக் கொண்டிருந்தார். வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுத் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டதோடு அதையும் பாடிக் கொண்டிருப்பார். இதைக் கேட்ட பக்கத்து வீட்டு ஆச்சி, ‘‘என்ன நம்ம முத்து பாட்டுல மொத ரெண்டு வரிகள மட்டுமே பாடிக்கிட்டே இருக்கான். முழுசும் பாட வராதா’’ என கவிஞரின் தாயாரிடம் கேட்க... அதற்கு அவர், ‘‘அடி போடி பைத்தியக்காரி... எம் மகன் ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி. அவனுக்கா தெரியாது’’ என்று அன்றே தன் மகனைப் புகழ் ஏணியில் ஏற்றிப் பெருமைப்படுத்தினார்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலு படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69702-kannadasan-memorial-day-special-article.art
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment