Sunday, October 30, 2016

‘பயிருக்கு மழையாய் வந்த மகள்..!’ - நிவேதிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு...!

‘‘எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற உன்னால் உதவ முடியும் என நம்புகிறேன்’’ என்று சொன்ன சுவாமி விவேகானந்தரின் வரிகளுக்கு மதிப்புக் கொடுத்து, உடனே இந்தியா வந்தவர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இவர் வேறு யாரும் அல்ல... சுவாமி விவேகானந்தரின் முதன்மைச் சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா தான். அவருடைய பிறந்த தினம் இன்று.
மேற்கத்திய நாட்டிலிருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்... நம்முடைய பண்பாட்டின் மீதும் நம் மக்களின் முன்னேற்றத்தின் மீதும் முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்ந்து மறைந்த மார்கரெட் எலிசபெத் நோபிள், அயர்லாந்து நாட்டில் வசித்த மதபோதகரான சாமுவேல் நோபிள் - மேரி ஹாமில்டன் தம்பதியருக்கு 1867-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் நாள் மகளாகப் பிறந்தார். தந்தை உடல்நிலை காரணமாக, சிறுவயதிலேயே இறந்ததால் தன் தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்தார். இசையிலும் நுண்கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்த மார்கரெட், கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட ஹாலிபாக்ஸ் கல்லூரியில் பயின்றார். கல்லூரிப் படிப்பை முடித்த மார்கரெட், இங்கிலாந்தில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். ஏழைகளுக்குச் சேவை செய்வதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். பின்னர், 1892-ல் சொந்தமாகப் பள்ளி ஒன்றை நிறுவி அதனை மென்மேலும் முன்னேற்றினார்.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/india/70773-sister-niveditas-birthday-special-article.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment