மனம் அலை பாயப்படுவதாலேயே அது குரங்கு என அழைக்கப்படுவது உண்டு. அந்த மனதைக்கூட நாம் ஒழுங்காய் வைத்துக்கொள்ளாவிட்டால், மனநோய்க்கு ஆளாகிவிடுவோம். ‘சிந்தனைக்கும் மனநோய்க்கும் தொடர்பு உண்டு’ என்கின்றனர் அறிஞர்கள். அந்த நோய்க்கு மனதை ஆட்படுத்திவிடாமல் இருப்பது நம்முடைய கடமை. கல்விக்குப் பெரும் தடையாக இருப்பது மனநோயே ஆகும். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி மனநல தினம் கொண்டாடப்படுகிறது.
எதிலும் நாட்டமின்மை, தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், கட்டுப்படுத்த முடியாமல் திரும்பத் திரும்ப ஏற்படும் எண்ணங்கள் அல்லது செயல்கள், செக்ஸ் பிரச்னைகள், தானாகப் பேசுதல் அல்லது சிரித்தல், ஆக்ரோஷம் போன்ற காரணம் கண்டுபிடிக்க முடியாத நோய்களாலும், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலும் மனநோய் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் தானாகவோ, வாழ்க்கைச் சூழ்நிலைகளினாலோ அல்லது பல்வேறு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களினாலோ உண்டாகலாம்.
இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து மேலும் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69329-mental-suicide.art
நன்றி: விகடன் இணையதளம்
No comments:
Post a Comment