Wednesday, October 5, 2016

வடநாட்டில் சிலப்பதிகாரத்தைப் பரப்ப குரல் கொடுத்த ம.பொ.சி...!

மிழன் என்னும் இன உணர்வை வளர்த்து, தமிழ் வழங்கும் நிலப்பகுதியை உண்மையான தமிழ்நாடு ஆக மாற்றுவதற்குச் சிலப்பதிகாரம் ஒன்றே சிறந்த கருவி’’ என்றவர் தமிழறிஞர் ம.பொ.சி. அவரது நினைவு தினம் இன்று.

தமிழகத்தில் தேசியத்துக்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப்பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். ‘மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்’ என்பதே... சுருக்கமாக, ம.பொ.சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது.

‘தமிழரசுக் கழகம்’ என்ற அமைப்பு!
நாட்டு விடுதலைப் போரில் ம.பொ.சி ஈர்க்கப்பட்டு, ஆறு முறை சிறைவாசம் அனுபவித்தார். தேசிய இயக்கமான காங்கிரஸில் இருந்தபோதும், தமிழகத்தின் உயர்வே ம.பொ.சி-யின் நோக்கமாக இருந்தது. அதன் காரணமாக 1946-ல் ‘தமிழரசுக் கழகம்’ என்ற அமைப்பை நிறுவினார். அதன் வாயிலாக, ‘மொழியின் அடிப்படையில் தமிழகம் தனி மாநிலமாக வேண்டும்’ என்ற கோரிக்கையை எழுப்பினார். அப்போது, தென் மாநிலங்கள் இணைந்து சென்னை மாகாணமாக இருந்தது. ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திராவிலிருந்து அன்று பலத்த குரல்கள் ஒலித்தன. அப்போது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட இருந்த நேரம். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ‘‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’’ என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார் ம.பொ.சி. சென்னையில் எழுந்த இந்த எதிர்ப்புக் குரலால் அடங்கிப்போனது ஆந்திரம். ‘தற்காலிகமாவது சென்னையைச் சொந்தமாக்கிக் கொள்கிறோம்’ என்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் சொல்லப்பட்டது. ஆனால், ‘‘தற்காலிகமாகக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தம்’’ என்று தன் தொண்டர்கள் படைசூழ கடுமையாகப் போராடினார் ம.பொ.சி. இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார்.

மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/69113-maposi-has-given-voice-to-spread-tamil-literature-in-north-india.art

நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment