Thursday, September 29, 2016

போலீஸும்... விடை தெரியாத மூன்று சம்பவங்களும்!

‘‘ ‘உலகின் நம்பர்-1 போலீஸ்’ என்று பாராட்டப்படும் ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்கு அடுத்த இடத்தில் தமிழக போலீஸார் உள்ளனர்’’ என ஒரு செய்தி பரவலாக இருந்துவருகிறது. இதில், எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது எனத் தெரியவில்லை. காரணம், சமீபகாலமாக காவல் துறையில் அவர்களின் பங்கு மிகவும் மோசமாகவே இருக்கிறது. லஞ்சம், ஊழல், காட்டுமிராண்டித்தனம், மேலிட உத்தரவு, அலட்சியம் என அவர்களின் பாதை பெரும்பாலும் மாறிவிட்டது.
நம் நாடு எத்தனையோ விளைவுகளை இவர்களின் மாறுதல்களால் சந்தித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தி, அதனால் ஏற்படும் கொலைகளே அதற்கு முதல் காரணம். ஆனால், இதையெல்லாம்விடக் கடந்த சில மாதங்களில் தமிழகத்தையே அதிரவைத்த மூன்று சம்பவங்களுக்கும் போலீஸார், இதுவரை விடை காணாமல் இருப்பதுதான் மக்களுக்கான பாதுகாப்பில் பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க... http://www.vikatan.com/news/tamilnadu/68661-tamil-nadu-police-and-unfounded-cases.art
நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment