Saturday, December 3, 2016

மதுரையின் 'கதி'?! மனம் வருந்திய பாண்டித்துரை! - நினைவு தின சிறப்புப் பகிர்வு

செந்தமிழ் வளர்த்த செல்வப் பாண்டியன்; சங்கம் நிறுவிய சான்றோன்; கல்வியையும், செல்வத்தையும் ஒருங்கே பெற்ற மாமனிதன்; பாலவநத்தம் ஜமீன்தாரின் மகன்.. இப்படிப் பல்வேறு புகழுரைக்குச் சொந்தக்காரர் பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரையார். அவருடைய நினைவு தினம் இன்று....
புலவர்கள் நிறைந்த அவைக்களம்!
பாண்டிய நாட்டின் ஒரு பாளையப் பகுதியாக ராமநாதபுரம் இருந்த காலம் அது. அங்கு, இசைமேதையும் ஜமீன்தாரருமாக விளங்கிய பொன்னுச்சாமிக்கு, மகனாகப் பிறந்தவர்தான் பாண்டித்துரை. இவர் 1867-ம் ஆண்டு மார்ச் 21-ம் நாள் பிறந்தார். உக்கிரபாண்டியன் என்பது அவரது இயற்பெயர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த பாண்டித்துரை, கவர்ச்சியான தோற்றமும், இனிமையாகப் பேசும் ஆற்றலும் கொண்டிருந்தார். ஆசான் அழகர் ராசுவிடம் நற்றமிழையும், வழக்குரைஞர் வேங்கடசுவர சாஸ்திரியிடம் ஆங்கிலத்தையும் பயின்றார்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/coverstory/73973-tamil-scholar-pandithurai-death-anniversary-special-article.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment