Wednesday, December 14, 2016

வர்தா : நேற்று ஒரு நாள் இப்படி தான் கழிந்தது சாமான்யனுக்கு!

‘கடல் பகுதியில் தோன்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையே... பின்னர், படிப்படியாக வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் புயலாக மாறுகிறது’ என்பதுதான் புயலின் அறிகுறி ஆகும். என்றாலும், இந்த தாழ்வுநிலை சில சமயங்களில் வலுவிழந்து விடுவதும் உண்டு. ஆனால், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுவடைந்து, கடந்த 8-ம் தேதி புயலாக மாறியது. இதற்கு, ‘வர்தா’ என்று பெயரிடப்பட்டது. இது, ‘12-ம் தேதி சென்னையில் கரையைக் கடக்கும்’ என்று வானிலை மையத்தால் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தது. முன்னதாகவே தகவல் சொல்லப்பட்டதால், சென்னைவாழ் மக்கள், அதுகுறித்து அச்சப்படவில்லை. காரணம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பும், ஏ.டி.எம்-களில் பணம் இல்லாத தவிப்புமே மக்களைப் பெருத்த கவலையடையச் செய்திருந்தது. 

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/74820-vardah--this-is-how-common-man-dealt-with-cyclone-.art

நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment