Wednesday, November 23, 2016

'முதன்முதலில்’ சுரதா! - பிறந்த தின சிறப்புப் பகிர்வு

‘'நடுவிரல்போல் தலைதூக்கு – நம்
நாட்டாரின் இன்னலைப் போக்கு!’’ 
- என தன்னுடைய முதல் கவிதையிலேயே முத்திரை வரிகளைப் பதித்தவர் உவமைக் கவிஞர் சுரதா. அவருடைய பிறந்த தினம் இன்று.
புதுப்புது உவமைகளைப் புகுத்தியவர்!
மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன், தன் பெயரை மாற்றிக் கொண்டதைப்போல... ராஜகோபாலன் என்னும் தம் பெயரை, சுப்புரத்தின தாசன் என மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கம்தான்‘சுரதா’என மாறியது. சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்ற சுரதா, பாரதிதாசனிடம் சீடனாகச் சேர்ந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார்.
அந்தக் காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார். இதன்மூலம் சிறந்த இலக்கியவாதியாய் தமிழ் உலகுக்கு அறிமுகமானார். யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர்; செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர்; மரபுக் கவிஞரான இவர், தம்முடைய பாடல்களில் புதுப்புது உவமைகளைப் புகுத்திப் புகழ் பெற்றார். இதன் காரணமாக சிறுகதை எழுத்தாளர் ஜெகசிற்பியால், ‘உவமைக் கவிஞர்’ எனப் பாராட்டப்பட்டார்.
இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் தொடர்ந்து படிக்க:http://www.vikatan.com/news/tamilnadu/73226-tamil-poet-suratha-birthday-special-article.art
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment