Monday, November 21, 2016

‘‘அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்!’’ - திப்பு சுல்தான் பிறந்த தின சிறப்புப் பகிர்வு

தினாறாம் நூற்றாண்டின் மத்தியிலேயே விரிந்திருந்தது மைசூரு. இந்த நகரில் ஓரளவுக்கு வசதி படைத்த மனிதர் ஹைதர் அலி. இவரின் முதல் மனைவி ஷாபாஸ் பேகம். படுக்கையைவிட்டு நகர முடியாமல் பக்கவாதத்தால் படுத்திருந்த ஷாபாஸ் பேகத்துக்கு, அழகான பெண் குழந்தை ஒன்று இருந்தது. ஆனாலும், அவர் மனதில் இருந்த கவலை... தன் கணவருக்கு ஓர் ஆண் குழந்தை இல்லை என்பதுதான். இதுகுறித்து கணவரிடம், ‘‘நீங்கள் நிச்சயம் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும்’’ என்றார். ‘‘வேண்டாம். பெண் குழந்தையே போதும். நீ ஓய்வெடுத்துக்கொள்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஹைதர் அலி. 
‘‘இந்தக் குழந்தை, இறைவன் பணிக்கு...’’
நம்மால் இனி எந்தப் பயனும் இல்லை என்ற மனநிலையிலேயே இருந்த ஷாபாஸ் பேகத்தை, கணவரின் மறுமொழி மேலும் வருத்தியது. இருந்தாலும், தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார். தன்னை அடிக்கடி வந்து நலம் விசாரித்த ஃபக்ர் உன்னிஸாவை, தன் கணவருக்குத் திருமணம் செய்துவைத்தார். இரண்டு ஆண்டுகள் ஓடியும் இவர்களுக்குக் குழந்தை இல்லை. இதனிடையே ஷாபாஸ் பேகம் இறந்துவிட்டார். கடவுளைத் தரிசித்து கண்ணீர் சிந்தினார் ஃபக்ர். 1750-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். அப்போதே, ‘‘இந்தக் குழந்தை, இறைவன் பணிக்கு... இனி, பிறக்கும் குழந்தைகள் நமக்கு’’ என்று கணவரிடம் கோரிக்கை வைத்தார். ‘‘பார்க்கலாம்’’ என்றபடியே பதில் அளித்தார் ஹைதர் அலி.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/72935-tipu-sultan-birthday-special-article.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment