Friday, May 26, 2017

“ரஜினி அரசியலுக்கு வந்தால் இவரெல்லாம் காணாமல் போய்விடுவார்!” கொதிக்கும் ரசிகர்கள்

ஜினி வாய்ஸ்க்காக ஒரு கூட்டம்... அவருடைய வாய்ஸைவைத்து விளையாடுவதற்காக மற்றொரு கூட்டம்... இது, இன்று நேற்றல்ல. இருபது வருடங்களுக்கு மேலாக அவரை வைத்து அரசியல் நடத்துவதும், ஆதாயம் தேடுவதும் வாடிக்கையாகி வருகிறது. தேர்தல் நெருங்கும்போது அரசியல் கட்சிகள் அவரது ஆதரவைத் தேடுவதும், அவர் நடித்த படங்கள் ரிலீஸாகும்போது அவர் ஏதாவது பேசுவதுமே இதுபோன்ற கூட்டத்தினருக்கு விருந்தாக இருந்துவருகிறது. இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் நீண்ட நாள்களுக்குப் பிறகு மாவட்ட வாரியாகத் தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அந்தச் சமயத்தில் அவர் பேசிய கருத்துகள் அரசியல் குறித்து இருந்ததுடன், அவரும் வருங்காலத்தில் அரசியலில் குதிப்பார் என்றே தெரிகிறது. தற்போது ரஜினிகாந்த் பேசியிருக்கும் பரபரப்பான அரசியல் செய்தியால் மேலே சொன்ன கூட்டத்தினரைத் தவிர, பத்திரிகை, இணையம், இன்னும் பிறவற்றுக்கு நல்ல விருந்து கிடைத்துள்ளது. அவரும், அவருடையச் செய்தியும்தான் தற்போது அநேக இடங்களில் அதிகமாகப் பகிரப்படுகின்றன. இப்படியானச் சூழ்நிலையில், ரஜினி அரசியலில் இறங்கப் பலரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் வீரலட்சுமி உள்பட இன்னும் சிலர் ரஜினி அரசியலுக்கு வர எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரஜினி ரசிகர்களிடம் பேசினோம்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/90245-rajini-fans-comment-on-seeman-and-veeralakshmi.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment