Thursday, March 17, 2016

ஒரு ஏழை விவசாயியின் இறுதிக்குரல்!

(இந்தக் கட்டுரை 25-04-15 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)


'கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி  - விவசாயி' என்றார், மருதகாசி. அப்படிப்பட்ட விவசாயிகள் நம் நாட்டில் தற் கொலை செய்துகொள்வதுதான் வெட்கக்கேடானது. 

'ஆண்டொன்றுக்கு குறைந்தது 183 நாட்கள் விவசாயத்தில் ஈடுபடு கிறவரே பிரதானமான விவசாயி' என்று மக்கள்தொகைக் கணக் கெடுப்பில் வரையறை செய்யப்பட்டுள்ளது. இவர்தான் முழுமை யாக தன்னுடைய தொழிலில், வாழ்வாதாரத்தில் மற்றும் வருமா னத்தில் விவசாயத்தை சார்ந்திருப்பவராகக் கருதப்படுகிறார். 

அப்படியான இந்த விவசாயிகளின் வாழ்க்கைதான் தற்போது கேள்விக்குறியாகி விட்டது. இந்தியா ஒரு வேளாண்மை நாடு. அதில், 60 சதவிகித மக்கள் வேளாண்மையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து இருக்கின்றனர். இந்தியாவில் வேளாண்மை, பெரும்பாலும் பருவ மழையையே சார்ந்திருப்பதால், பருவமழை தவறுவது, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லாதது, நிலம் கையகப்படுத் துதல், இடைத்தரகர்களின் சுரண்டல் போன்ற காரணங்களால் விவசாயிகளின் தற்கொலைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கஜேந்திர சிங் என்ற விவசாயி, டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது. 1991 மற்றும் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு இடைப் பட்ட 20 ஆண்டுகளில், விவசாயிகளின் எண்ணிக்கையில் 72 லட்சம் வீழ்ச்சியடைந்துள்ளது. திட்டக் கமிஷன் புள்ளி விவரத்தின்படி 2005 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் விவசாயத் துறையில் 140 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

தேசிய குற்றப் பதிவு மையம் (National Crime Records Bureau) 2013-ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் வெளி யிட்ட புள்ளி விவரங்களின்படி, 1995 முதல் 2013 வரையிலான 18 ஆண்டுகளில் 2,84,694 இந்திய விவசாயி கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

1995-ல் தேசியக் குற்றங்கள் பதிவு அமைப்பானது, விவசாயத் தற்கொலைகளைப் பட்டியலிட்டது. பத்திரி கையாளர் சாய்நாத் என்பவரால் 1990-ல் விவசாயத் தற்கொலைகள் வெளிச்சத்துக்குத் தெரிய ஆரம்பித்தன. 1990-ம் ஆண்டிலிருந்து இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள் ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங் களில்தான் பெரும்பாலான விவசாயத் தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
இதன்படி மேற்கண்ட மாநிலங் களில் 2009-ல் 62 சதவிகிதமாக இருந்த தற்கொலை செய்துகொண்ட விவ சாயிகளின் எண்ணிக்கை, 2010-ல் 66.49 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. மகாராஷ்டிரத்தில், 1995 முதல் 2002 வரையிலான காலத்தில் 20,066 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின்படி கடந்த 2011-2013-ம் ஆண்டுகளுக்குள் 39,553 விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டுள்ளனர்.  2014-ம் ஆண்டில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 1,981 விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டுள்ளனர். அதுவே இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் 601-ஆக ஆகி யிருக்கிறது. இப்படியே இந்த மாநிலம் போய்க்கொண்டிருந்தால், விவசாயிகளின் தற்கொலை மாநிலமாகக்கூட அது மாறிவிடும்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலையில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்த அதாவது, ஆண்டுக்கு சராசரியாக 1,567 தற்கொலைகள் நடந்துகொண்டிருந்த சத்தீஸ்கரில்கூட தற்கொலைகள் குறைந்துள்ளன என்கிறது புள்ளிவிவரம். மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மட்டும் 2009-ஐக் காட்டிலும் 2010-ல் விவசாயத் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. சத்தீஸ்கர், தமிழ்நாடு, ராஜஸ் தான் ஆகிய மாநிலங்களில் குறைந்துள்ளன.

கடந்த 2012-ம் ஆண்டு தமிழகத்தில்கூட காவிரியில் தண்ணீர் இல்லாமல், பயிர்கள் கருகியதால் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தத் தற்கொலைகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, தேசிய அளவில் உள்ள புள்ளி விவரங்களைக் கணக்கிட்டால், 2004-ம் ஆண்டிலிருந்து விவசாயிகளின் தற்கொலை என்பது சராசரியாக 30 நிமிடங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அமைந்திருக்கிறது.

விவசாயிகளின் தற்கொலைகளுக்கு பருவமழை, வறட்சி, கொள்முதல் விலை, கடன் பிரச்னை, நிலம் கையகப்படுத்தல் எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதை களைவதுதான் அரசின் கடமை. அதை விட்டுவிட்டு அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டு இருந்தால் விவசாயிகளுக் கோ அல்லது அவர்களின் குடும்பங்களுக்கோ எதுவும் ஆகப்போவதில்லை. விவசாயிகளின் தற்கொலை யைத் தடுக்க மத்திய அரசு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

''விளைபொருட்களுக்கு 50 சதவிகித கூடுதல் கொள்முதல் விலை, மானிய விலையில் உரங்கள், வட்டி யில்லா கடன், பயிர் சேதத்துக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு ஆகியவை அடங்கிய சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அதை மத்திய அரசு செயல்படுத்தினால் விவசாயிகள் வாழ்வில் இருள் நீங்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.சண்முகத்திடம் பேசினோம். '' விவசாயம் லாபகரமாக இல்லை என்று சொல்லிவிட்டுத்தான் கஜேந்திர சிங் தற்கொலை செய்துகொண்டார். அவரைப் போன்றுதான் லடசக்கணக்கான விவசாயிகள் இந்தியாவில் உள்ளனர். மத்திய அரசின் வட்டி விகிதம் அதிக ரிப்பு என்கிற அணுகுமுறையால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். தேசிய விவசாயி கள் கமிஷன் குழுவில் இடம்பெற்றிருந்த எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைத்த 4 சதவிகிதம் வட்டி விகிதம் தற்போது 11 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக தனியார் துறையில் கந்துவட்டி வாங்கி விவசாயம் செய்யப்படுகிறது. பி.ஜே.பி தேர்தல் அறிக்கையின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு 50 சதவிகித லாபம் உறுதி' என்றது. ஆனால் அவர்கள் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. கரும்புக்குக்கூட டன்னுக்குக் கட்டுப்படியான விலையைக் கொடுப்பதில்லை. தோராயமாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. வேளாண் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் தற்கொலை அதிகம் நடக்கிறது. இதை மத்திய அரசு மாற்றவேண்டும்'' என வலியுறுத்துகிறார் அவர்.   

'இந்த நாட்டில் விவசாயிகளுக்கு மதிப்பு இல்லை' என்று கத்திவிட்டு உயிரைவிட்ட கஜேந்திர சிங்கின் வார்த்தைகள்தான், ஒட்டுமொத்த விவசாயிகளின் உரிமை முழக்கமாய் உள்ளது. இதை உணர்ந்து இனிவரும் காலங்களுக்காக, விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக மத்திய அரசு செயல்பட வேண்டும்.

- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment