Friday, February 12, 2016

குறளுக்குப் பொருள் தரும் குறுங்கவிதைகள் -1




1. முதன்மை...
எழுத்துக்கு அகரம்
உலகத்துக்கு கடவுள்!
---------------------------------

2. தூய அறிவு வடிவானவரைத்
தொழாதவர்
நிறையக் கற்றும் பயனில்லாதவர்!
-------------------------------------------------

3. மலர்மீது அமர்ந்திருக்கும்
இறைவனை நினைப்பவர் 
மண்ணில் நீடித்திருப்பர்!
------------------------------------------

4. விருப்பு, வெறுப்பின்றி வாழ்பவரைப் 
பின்பற்றிச் செல்வோருக்குத் 
துன்பம் இல்லை!
----------------------------------------------------------

5.இறைவனின் மெய்ப்புகழை நேசிப்பவரிடம் 
அறியாமையால் உருவாகும் 
இருவினை சேர்வதில்லை!
--------------------------------------------------------------------

6.ஐம்பொறி ஆசைகளை அகற்றி 
இறைவனின் ஒழுக்கநெறியில்
நிற்பவர் நல்வாழ்க்கை பெறுவர்!
----------------------------------------------------

7.இறைவனைத் தொழாத
மற்றவர்களுக்கு
மனக்கவலை தீருவது கடினம்!
-------------------------------------------------

8. இறைவனைத் தொழாதவர்
இன்ப, பொருள் கடல்களைக்
கடக்க முடியாது!
---------------------------------------------

9. ஐம்பொறி உடைய இறைவனை
வணங்காதவர் எவரும்
ஐம்பொறி செயலற்றவர்!
--------------------------------------------------

10.இறைவனைத் தொழுதவர்
பிறவிக்கடலை நீந்துவார்...
வணங்காதவர் நீந்தமாட்டார்!
-------------------------------------------------

11.உலகத்தை வாழவைப்பதால்
அமிழ்தமாகிறது...
மழை!
---------------------------------------------

12.உணவுப்பொருட்களை விளைவிப்பதோடு
உண்பவர்க்கு உணவாக இருக்கிறது
மழை!
-----------------------------------------------------------------

13.கடல் சூழ்ந்த உலகத்தில்
மழை பொய்த்துவிட்டால்
உயிர்களைப் பசி வருத்தும்!
--------------------------------------------

14.மழை என்னும் 
வருமானம் இல்லாவிட்டால்
மங்கிவிடும் உழவுத்தொழில்!
-----------------------------------------------
15. மக்களைப் பெய்யாமல் கெடுத்தும்
பெய்தும் திருத்துகின்றது...
மழை!
-----------------------------------------------------------

16. வானிலிருந்து மழைநீர்
மண்ணில் விழாவிட்டால்
பசும்புல் முளைப்பது அரிது!
-------------------------------------------

17.மழை பெய்யாவிட்டால்
பெருங்கடல்கூட
வற்றிப்போகும்!
-----------------------------------------

18. மழை பொய்த்துவிட்டால்
தெய்வத்துக்கு வழிபாடும்
திருவிழாவும் நடக்காது!
--------------------------------------------

19.மழை பெய்யாவிட்டால்
பிறர்பொருட்டு தானமும் இல்லை...
தம்பொருட்டு தவமும் இல்லை!
----------------------------------------------------------

20. எத்தனை பெரிய மனிதரும்
நீரில்லாமல் வாழமுடியாது...
அந்நீரே மழையே ஆகும்!
------------------------------------------------




No comments:

Post a Comment