Wednesday, February 17, 2016

குறளுக்குப் பொருள் தரும் குறுங்கவிதைகள்-4

61.அறிவார்ந்த பிள்ளைகளைப்
பெறுவதைத் தவிர,
வேறு எதுவும் இல்லை.
------------------------------------------------

62.பழிச்சொல் படாத
நற்பிள்ளைகளைப் பெற்றால்
எழுபிறப்பும் தீவினை சேராது!
------------------------------------------------

63.தம்பொருள் என்பது தம்மக்கள்...
அவர்பொருள் என்பது அவரவர்
வினையின் செயல்கள்
-----------------------------------------------------

64.தம் பிள்ளைகள் பிஞ்சுக்கையால்
பிசையப்பட்ட உணவு
பெற்றோருக்கு அமிழ்து!
---------------------------------------------------------

65. தம் குழந்தையின் மெய்தீண்டல்
உடலுக்கு இன்பம் - அக்குழந்தையின்
சொல் கேட்பது செவிக்கு இன்பம்!
--------------------------------------------------------

66. தம் குழந்தையின்
சொல் கேளாதவர்
குழல், யாழ் இனிது என்பர்!
--------------------------------------------

67.கற்றவர் அவையில் தன் மகனை
முதன்மைப் பெறச் செய்வதே
தந்தையின் கடமை!
--------------------------------------------------------

68.தம்மைவிட பிள்ளைகள் அறிவில்
சிறந்து விளங்கினால் - அது
பெற்றோரைவிட மற்றவர்க்கே மகிழ்ச்சி!
-----------------------------------------------------------------
69.மகப்பேறு காலத்து மகிழ்ச்சியைவிட
தன் மகன் பிறரால் சான்றோன் எனக்
கேட்பதே பெற்ற தாய்க்கு மகிழ்ச்சி!
---------------------------------------------------------

70. --------------------------------------------
------------------------------------------------
----------------------------------------------------


71.அன்பைத் தாழிட முடியாதபோதும்
அன்பானவரின் துன்பம்
கண்ணீரில் தெரிந்துவிடும்!
--------------------------------------------------------

72. அன்புடையோர் 
எல்லாவற்றையும் துறப்பர்...
இல்லாதோர் ஆசைகொள்வர்!
-----------------------------------------------

73. உயிர், உடல் இணையைப்போல்
அன்பும் செயலும் இருப்பதே
அழகிய பொருத்தம்!
------------------------------------------------------

74.அன்பானது பிறரிடம் 
நல்ல பற்றைத் தரும் - அதுவே 
நட்பைச் சிறப்பாக்கும்!
---------------------------------------------------

75.உலகத்தில் இன்பத்துடன்
வாழ்கிறவர் பெறும் சிறப்பு
அன்பு பொருந்திய பயனாகும்!
-------------------------------------------------

76.அறத்துக்கு மட்டுமே அன்பு
துணையாகும் என அறிந்தோர்
வீரத்துக்கு ஆகாது என்பர்!
------------------------------------------------

77. எலும்பில்லாத புழுவை 
வெயில் வருத்தும் - அதுபோல
அன்பில்லாதவரை அறம் கொல்லும்!
------------------------------------------------------------

78.மனதில் அன்பு இல்லாதவர்
வாழ்க்கை பாலைவனத்தில்
துளிர்க்காத மரமாகும்!
-----------------------------------------------

79.அன்பில்லாத அகத்துறுப்பு
உடையோருக்கு புறத்துறுப்பு
அழகாய் இருந்து என்ன பயன்?
-------------------------------------------------

80.அன்பினால் இயங்குவதே
உயிருடல் - அது இல்லையேல் 
எலும்பு தோல் போர்த்திய வெற்றுடல்!
-------------------------------------------------------------------

No comments:

Post a Comment