தொட்டவுடன்
அழுகையை நிறுத்தியது...
தொலைபேசி!
சேமிக்க அழைத்தேன்...
சுருட்டிக்கொள்ள வந்தார்கள்
பங்குதாரர்கள்!
மலர்ந்தது தாமரை...
மனக்கவலை வந்தது
தெய்வத்திற்கு!
கல்லறைக்கு
முகவரியைக் காட்டியது...
காதல்!
ஆடை அவிழ்ப்பில்
மானம் போனதால் தற்கொலை...
வெங்காயம்!
பேனாவின்
சின்னவீடு...
ஆட்காட்டி விரல்!
விறகில்லாமலேயே
எரிவது
ஏழையின் வயிறு மட்டும்!
மார்கழியில் - பூ
வைத்துக்கொள்ளும்
கோலங்கள்!
ஒரு சீட்டில்
இருவர் பயணம்...
கர்ப்பிணி!
வழுக்கையோடு
போட்டி...
இளநி!
படம் பிடித்தது பார்வை...
பதிவு செய்தது இதயம்...
உருவானது காதல்!
மண்ணில் போட்ட
விதையிலும் ஊழலா?
பயிரோடு களை...
ஜோடிப்பொருத்தம் சூப்பர்...
திருமண மண்டபத்தில்
எனக்குக் கிடைத்த புது செருப்பு!
இன்பத்தின் விருந்து...
துன்பத்தின் மருந்து...
குழந்தை!
பூட்டிவைத்தும்
தப்பித்துவிட்டது...
மனசு!
குடிபோதையில் தடுமாற்றம்...
கோணல்மானலாயின வரிகள்...
மை உறிஞ்சும் பேனா!
சில்மிஷமா....
சிறைபிடிப்பா?
மலரில் வண்ணத்துப்பூச்சி!
நனைத்தது மழை...
சிரித்தது காற்று...
அழுதது மரம்!
கறைபடிந்த சுவர்
வெள்ளையானது...
கட்சி வேட்பாளர்களுக்கு!
உடையாமல் விற்றேன்...
உடைத்துத் தின்றான்...
முறுக்கை!
எழுத்துக்களில் ஊனம்...
மதிப்பு இழந்தது...
வார்த்தை!
உடலில் ஊனம்...
மறைத்தது...
வரதட்சணை!
இவை, நான் எழுதிய 'ஊசி' என்கிற கவிதை நூலில் இருந்து தொகுக்கப்பட்டவை.
அழுகையை நிறுத்தியது...
தொலைபேசி!
சேமிக்க அழைத்தேன்...
சுருட்டிக்கொள்ள வந்தார்கள்
பங்குதாரர்கள்!
மலர்ந்தது தாமரை...
மனக்கவலை வந்தது
தெய்வத்திற்கு!
கல்லறைக்கு
முகவரியைக் காட்டியது...
காதல்!
ஆடை அவிழ்ப்பில்
மானம் போனதால் தற்கொலை...
வெங்காயம்!
பேனாவின்
சின்னவீடு...
ஆட்காட்டி விரல்!
விறகில்லாமலேயே
எரிவது
ஏழையின் வயிறு மட்டும்!
மார்கழியில் - பூ
வைத்துக்கொள்ளும்
கோலங்கள்!
ஒரு சீட்டில்
இருவர் பயணம்...
கர்ப்பிணி!
வழுக்கையோடு
போட்டி...
இளநி!
படம் பிடித்தது பார்வை...
பதிவு செய்தது இதயம்...
உருவானது காதல்!
மண்ணில் போட்ட
விதையிலும் ஊழலா?
பயிரோடு களை...
ஜோடிப்பொருத்தம் சூப்பர்...
திருமண மண்டபத்தில்
எனக்குக் கிடைத்த புது செருப்பு!
இன்பத்தின் விருந்து...
துன்பத்தின் மருந்து...
குழந்தை!
பூட்டிவைத்தும்
தப்பித்துவிட்டது...
மனசு!
குடிபோதையில் தடுமாற்றம்...
கோணல்மானலாயின வரிகள்...
மை உறிஞ்சும் பேனா!
சில்மிஷமா....
சிறைபிடிப்பா?
மலரில் வண்ணத்துப்பூச்சி!
நனைத்தது மழை...
சிரித்தது காற்று...
அழுதது மரம்!
கறைபடிந்த சுவர்
வெள்ளையானது...
கட்சி வேட்பாளர்களுக்கு!
உடையாமல் விற்றேன்...
உடைத்துத் தின்றான்...
முறுக்கை!
எழுத்துக்களில் ஊனம்...
மதிப்பு இழந்தது...
வார்த்தை!
உடலில் ஊனம்...
மறைத்தது...
வரதட்சணை!
இவை, நான் எழுதிய 'ஊசி' என்கிற கவிதை நூலில் இருந்து தொகுக்கப்பட்டவை.
No comments:
Post a Comment