Friday, December 18, 2015

ஹைக்கூ முத்துக்கள்

தேன்மொழி, கனிமொழி
எனக்குப் பிடித்தது...
தமிழ்மொழி!


முடிந்துபோனது நேற்று...
முயற்சி செய் இன்று...
முத்து கிடைக்கும் நாளை!


முதலில் - நீ
பிறகு - வீடு
பின்பு - நாடு!


வாழ்வே போர்க்களம்...
அதில் வாழ்ந்தவர் ஏராளம்...
நீயும் வாழு பேர் சொல்லலாம்!


மலருக்கு மகரந்தச்சேர்க்கை
மனிதரில் சிலருக்கு
ஓரினச்சேர்க்கை!


கடலோடு இந்தியா
வரலாறு சொல்கின்றது...
கடனோடு இந்தியா
வங்கி சொல்கின்றது!


உயிரெழுத்து கணவன்...
மெய்யெழுத்து மனைவி...
உயிர்மெய்யெழுத்து குழந்தைகள்...
ஆயுத எழுத்து பெரியோர்கள்!


நேற்றுமுதல் நீதான்!
இதில் மாற்றம் ஏற்பட்டால்,
சந்தேகமில்லை...
அது, உன் தங்கைதான்!


மண்புழு, மீன் என
இரண்டையும் கொன்று
மனிதன் உயிர் வாழ்ந்தான்....
நன்றாய் தின்று!


வீட்டையும் மறக்கவில்லை...
திருடனையும் குறைக்கவில்லை..
நன்றியுள்ளது நாய் மட்டும்தான்!

வாழ்க வளமுடன்...
வளர்க நலமுடன்...
கூடவே பணமுடன்...
கொஞ்சம் குணமுடன்!


பெய்யாததற்கும்
பெய்வதற்கும்
பொது ஜனங்களிடம்
பொல்லாப்பு அடைகின்றது மழை!


இளம்பிள்ளை வாதத்தை
முற்றிலும் ஒழிக்க வேண்டும்...
இளம்பிள்ளை (வி)வாதத்தை
ஏற்றுக்கொள்ள வேண்டும்!


ஒவ்வொன்றும் ஓர் அழகு...
பரட்டை தலை
சுருட்டை தலை
வழுக்கை தலை!


முகலாய மன்னன்...
மும்தாஜின் கணவன்...
தாஜ்மஹால் நாயகன்...
ஷாஜகான்!


அன்று - சிலம்பு...
இன்று கொலுசு...
நாளை இது பழசு...

இது , நான் எழுதிய 'ஊசி' என்கிற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.

No comments:

Post a Comment