Monday, January 30, 2017

முதல்வரே.... இவ்வளவு மோசமாக நீங்கள் இதைக் கையாண்டிருக்க வேண்டாம்...!

அதிர்ஷ்டம் எல்லோருக்கும் அமைவதில்லை. ஆனால், தமிழக முதல்வர் ஓபிஎஸ்-க்கு  இது உச்சம் பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம். ‘மூன்று முறை முதல்வர் பதவி, முதல்முறையாகக் குடியரசு தினத்தன்று கொடியேற்றும் வாய்ப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெற்றி’ என தன் சாதனைப் பயணத்தை நிகழ்த்திவரும் ஓபிஎஸ்-ஸின் ஒவ்வொரு செயல்களும்... அவருடைய அரசியல் வரலாற்றில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன என்றால், அதை அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும்? 
அதிர்ச்சியில் உறைந்த அ.தி.மு.க-வினர்!
2001-ம் ஆண்டு டான்சி ஊழல் வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தபோது... ‘அடுத்த முதல்வர் யார்?’ என்ற பரபரப்பு அ.தி.மு.க-வில் எழத் தொடங்கியது. அப்போது, ‘‘பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், உப்பிலியாபுரம் சரோஜா, இளவரசி’’ என்று ஆளாளுக்கு ஒரு பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜெயலலிதாவோ, ‘‘இப்போது ஏற்பட்டிருக்கிற சூழ்நிலை உங்களுக்கு எல்லாம் தெரியும். புதிதாக ஒரு முதல்வரைத் தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நான், ஒரு பெயரைக் குறிப்பிடுகிறேன்; அதற்கு, ஒப்புதல் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் நான் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’’ என்று சொல்லி... சில நிமிடங்கள் சஸ்பென்ஸ் காட்டிய அவர்... மீண்டும், ‘‘பெரியகுளம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் இப்போதைய வருவாய்த் துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்’’ என்று சொல்ல... ஒட்டுமொத்த அ.தி.மு.க நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். 
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/politics/79021-dear-chief-minister-you-could-have-handled-this-in-a-better-way.art
நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment