Wednesday, January 20, 2016

'இனம்'!

ஆணினம் பெண்ணினம்...
அகிலத்துக்குத் தெரிந்தது
இந்த இரண்டு 'இனம்'!

ஓரினம் ஈரினம்
ஒன்றுபட்ட உயிரினம்...
உள்ளத்தைக் கவரும்
பூவினம்!

சிறகு விரிக்கும்
பறவையினம்...
சினம்கொள்ளும்
விலங்கினம்!

இவை அனைத்தும்
பார்ப்பதில்லை 'இனம்'!
சிந்தையுள்ள 
மனித இனம் மட்டும்
பார்க்கிறது 'இனம்'!

No comments:

Post a Comment