விவசாயத்தைத்
தூக்கி நிறுத்துவோம்...
விதண்டவாதத்தை
ஒழித்துக்கட்டுவோம்...
விளைநிலங்களைச்
செம்மையாக்குவோம்...
வெளிநாடுகளில்
கையேந்துவதைத் தவிர்ப்போம்!
விளைச்சலைப்
பெருக்க வழிவகுப்போம்...
விவசாயிகளிடம்
கலந்துரையாடுவோம்...
வீணாய்ப்
போகும் நீரைப் பாதுகாப்போம்...
வீரியமிக்க
விதைகளைப்
பயன்படுத்துவோம்!
ஆறு,
ஏரி,
கால்வாய்களைத்
தூர்வாருவோம்...
அதன்
மீதிருக்கும் குடிசைகளை
அகற்றுவோம்...
அனைத்தையும்
முறையாகப் பயிரிடுவோம்...
அகிலத்தையே
திரும்பிப் பார்க்க வைப்போம்!
அனைவரும்
ஒன்றுகூடி உழைப்போம்...
அரசாங்கத்திடம்
கடனுதவி பெறுவோம்...
ஆதாயம்
பெற்று வாழ்வில் மகிழ்வோம்...
அதீத
வளர்ச்சியால் பெருமை காண்போம்!
No comments:
Post a Comment