Friday, April 17, 2015

அடிச்சுப்புடாதீங்க



அழுக்குச் சட்டையானாலும் தொவச்சிப்போட்டு
அழாமயிருக்க அம்பதுகாச கையிலகொடுத்து
அரைமைல் தூரம் இடுப்புல சுமந்து
அழகு முகத்தையும் கறுப்பாக்க வந்த சூரியன
கந்தல்புடவையின் முந்தானையால மறைச்சி
காத்தடிச்சா பறந்துபோகும்
கொட்டாயி பள்ளிக்கூடத்தல
கொண்டுபோயி இறக்கிவிட்ட கையுடன்
வாத்தியார பார்த்து,
அய்யா, புள்ள படிக்கலைனாலும்
பரவாயில்ல... அடிச்சுப்புடாதீங்க...ன்னு
அனுதாபத்தச் சொல்லிட்டு
அரக்கப்பரக்க களத்துமேட்டேறி
கள பறிக்கயிலே,
சேத்துக்கால சேப்போ கறுப்போ
எது கடிச்சாலும் அதபத்தி கவலைப்படாம
அப்போதும் எம்புள்ள
எப்படியிருக்கானோ என்று
ஏங்கித் தவிக்கும்
பெத்தவளின் மனம்!

No comments:

Post a Comment