Tuesday, September 5, 2017

அரியலூரின் மகளே... அவசரப்பட்டு விட்டாயே!

''அரியலூரின் மகளே... அவசரப்பட்டு விட்டாயே! 'ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல... உன்னைப்போலச் சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே' என்று சொன்ன, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான், ‘உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்குக் கூட எதிர்காலம் உண்டு' என்று சொன்னார். ஆனால் நீயோ, அந்த வரிகளை நினைக்காமல்... அவர் சொன்ன இன்னொரு பொன்மொழியான, 'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்பதை நினைவில் வைத்து உன் முடிவைத் தேடியிருக்கிறாயே? அவசரத்தில் நீ தேடிக்கொண்ட முடிவால், அரசாங்கத்தில் மாற்றமா நிகழ்ந்துவிடப் போகிறது? ஒருபோதும் நடக்காது. ஆனால், நீ எடுத்த இந்தத் தற்கொலை முடிவைக் கொஞ்சம் மாற்றி வேறு பாதையில் பயணித்திருந்தால், இன்னொரு சரித்திரத்தையும் நீ உருவாக்கியிருக்க முடியுமே... அதை ஏன்  நீ உணராமல் போனாய்? 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/coverstory/101152-you-made-a-hard-decision-anitha.html

நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment