Friday, July 15, 2016

நவீனம்

'வேறொரு 
சாதிக்காரர் அமர்ந்த
திண்ணையை 
ஜலம் கொண்டு அலசு'
என்ற தாத்தாவிடம்
வாயைக் கழுவச்சொல்லி
தண்ணீர் கொடுத்தாள்...
பேத்தி!

No comments:

Post a Comment